Saturday, March 08, 2008

சுஜாதா சார் ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்லேட்...- சுட்ட பதிவு

சுஜாதா அவர்கள் இறந்து பல நாட்கள் ஆன பின்னரும், இன்னும் அவரது மறைவுக்கு வருத்தப்பட்டு வரும் புதிய பதிவுகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும் அதிக பேர் தாமதமாக பின்னூட்டமிடுவதால் மீண்டும் மீண்டு முகப்பில் இந்த பதிவுகளே இடம்பிடிக்கின்றன .

இதை தவிப்பதர்க்க்காக அவரது ரசிகர்களுக்கு இந்த பதிவு. இதில் உள்ள வரிகளை உபயோக படுத்தி விரைவாக பதிவோ அல்லது பின்னூட்டமோ போட்டு விடவும். கோடிட்ட இடங்களை உங்களுக்கு தகுந்தவாறு பூர்த்தி செய்யலாம்.

நண்பர் மன்வேட்டியன் பதிவு இன்னும் தமிழ்மணத்தில் வராததால் பொறுமை இழந்து என்னை ரிலீஸ் பண்ண சொல்லுறார்.
திட்ட போகும், பாராட்ட போகும் எல்லாரும் அவரது பதிவுலே திட்டவும். 18-35 வயசுக்குள் இருக்கும் அழகான பெண்கள் என் பதிவிலேயே திட்டலாம் , பாராட்டலாம்.

http://manvettiyan.blogspot.com/2008/03/blog-post_06.html

___________

யப்பா சாமி.... இந்த கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா சாமி...
சுஜாதா சார் செத்து ரெம்ப நாள் ஆயபோசுடா... ரெண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியே கிட்டக்க வந்துடுச்சு ... இவனுங்க இன்னும் இரங்கல் கூட்டம் நடத்திட்டு இருக்கனுங்க..
ரெம்ப பேரு திருப்பி திருப்பி எழுதுறீங்க... பின்னோட்டம் போடுறீங்க...அதனால இந்த மேட்டர் தான் திருப்பி திருப்பி தமிழ்மணம் காட்டுது ...
உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் தரேன்.

1. சுஜாதா சாரை நான் _____________ பார்த்து உரையாடிய போது அவர் எளிமையும் அறிவையும் ஒரு சேர தாங்கி பிடித்திருப்பது தெரிய வந்தது
( ஏரோ பிளனில், வாசிங்க்டன் சாப்பிங் சென்டரில், மெரினா பீச்சில், டாய்லெட் டில்)

2. அவர் தமிழ் எழுத்துலகின் _____________________
( சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ஜேம்ஸ் ஹர்ட்லே செஸ் , போரிஸ் பேக்கர், மைக் டைசன் ..)

3. அவரது எழுத்துக்களை நான் __________________ முதலே படித்து வருகிறேன்
( எட்டாம் வகுப்பு மூன்றாம் முறையாக படித்த காலத்திலேயே, பல்வாடியில் சேர்ந்த பொழுது, கல் தோன்றி முன் தோன்ற காலத்தே )

4. அவர் ஒரு __________________
(சகல கலா வல்லவன், எழுத்தையும் தாண்டி நின்றவர், எழுத்துக்கு முன்னடி நின்றவர் , டென்னிஸ் விளையாட்டு வீரரும் கூட, )

5. எனக்கு ___________ ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம்
( கணினி மீது, கல்குலட்டேர் மீது, பக்கத்து வீட்டு ஆண்ட்டி, எதிர் வீட்டு பிரேமா மேல் , யாஹூ சாட்டில் )

6. அவரது எழுத்துகளை எனக்கு மிகவும் பிடித்தது _________________
( கற்க கசடற, என் இனிய சந்திரா, கொச்சை கயிறு, பிரிப்போம் சந்தி சிரிப்போம், க-நாவில் அவர் புள்ளி வைத்து அதை க்க்-கனாவாக மாற்றும் அழகு )

7. கதை எழுதுவதில் மட்டும் அல்ல, அவர் ___________ மிக திறமையானவர்.
( கவிதை எழுதுவதிலும் , கைவித்தையிலும் , நாடகம் எழுதுவதிலும் , நகம் கடிப்பதிலும், தம்பிராஸ் மாநாட்டில் பேருரை ஆற்றுவதிலும் )

8. சுஜாதா அவர்களின் அருமையான படைப்புக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் ________________ இருந்தன என்பது குறிப்பிட தக்கது .

( அவரது அலுவலகத்துக்கு கீழ் இருந்த பெரிய ஆங்கில புத்தக கடை, BSNL லோ BEL லோ கொடுத்த OC இன்டர்நெட் கனக்சன், அவருக்கு வாசகர்கள் அனுப்பிய கேள்வி கணைகள் )

9. அவரது கதைகளை வார இதழ்களில் படிக்கும் போது நான் ஒவ்வொரு வாரமும் மிகவும் ஆவலுடன் தேடுவது ___________
(வசந்த் பேசும் வரிகள், அரஸ் அவர்கள் வரைந்த கவர்ச்சி படங்கள், 'முற்றும்'.)

10. அவரது ___________ தமிழகத்திற்கு பெரும் துன்பம்
( இறப்பு, பிறப்பு, சினிமா வசனங்கள்...)

சீக்கிரம் பில் அப் பண்ணி எல்லாரும் இன்னிக்கு நைட்டுக்குல பதிவு போட்டுரங்க.
நாளைல இருந்து நம்ம வழக்கமான மொக்கைக்கு போய்டலாம்..

Friday, March 07, 2008

சுப்புரமனிய சாமி போல் சோ...

ரஜினியோட தன்வரலாறு நூல் வெளியீட்டு விழாவில சோ பேசு னாராம் .. அதுக்கு நம்ம கமெண்ட் இங்க...
(http://satrumun.com/localnews/?p=82)

//‘ஊழலற்ற தலைமைக்கு ரஜினிகாந்த் & நரேந்திர மோடி போல் ரஜினி’: சோ//

நகைச்சுவையான அரசியல் பேச்சுக்கு சோ & சுப்புரமனிய சாமி போல் சோ

//டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய நடிகர் ரஜினிகாந்தின் ஆங்கில சுயசரிதை ‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.//

நன்றி. நன்றி. மிக்க நன்றி. நம்ம விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு தமிழே தக்கு முக்கு. இதில இனி இங்கிலீஸ் புக்... அவுங்க இத படிக்காம இருக்குறது தான் அவனுங்களுக்கு நல்லது 'நறுக்குன்னு' புரிய வச்சதுக்கு நன்றி .

// பத்திரிகையாளர் சோ புத்தகத்தை வெளியிட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா பெற்றுக்கொண்டார். //

அப்பாடா .. நான் கூட அம்மா அஞ்சற பெட்டில ஒழிச்சு வச்சிருக்க காசு, பாட்டி வெத்தல பாக்கு போட வச்சிருந்த காசு... சாரி சாரி .... இப்ப அதெல்லாம் உங்க படம் ஓடுற தேட்டர்ல போண்டா வாங்க கூட பத்தாது.... இஞ்சினீரிங் கல்லேசு பீஸ் கட்ட வச்சிருந்த காச ஆட்டைய போட்டு படம் பார்த்து உங்கள கோடிச்வரனக்கிய ரசிக பெருமக்களுக்கு ஏதோ மரியாத செஞ்சுட்டீங்கலோனு பயந்து போயிட்டேன் ...

// ரஜினியைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். என்னைப் பொருத்தவரை ரஜினியின் நண்பர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருடன் பல ஆண்டுகள் பழகியிருந்தாலும் அவரை கணிப்பது மிகவும் சிரமமான விஷயம். //

ஜினி முதலமைச்சரா இருக்குற அரசபைல நீங்க சபா நாயகர் ஆகனும்னா இது மாதிரி எல்லாம் சொல்லி தான் ஆகணும்.


// அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வாழ்க்கையில் நடிகர் இல்லை. அவர் அரசியல் பேசுவார்; ஆனால் அவர் அரசியல்வாதி இல்லை. ஆன்மிகத்தைப் பற்றி மிக ஆழமாகப் பேசுவார். ஆனால் அவர் சாமியாரோ, குருவோ அல்ல.//

.. உங்க மாதிரி தானா

// அவர் மனதுக்கு ஒரு விஷயம் சரி என்று பட்டால் அதைத் தைரியமாகச் செய்வார்.
ஏதோ என்னுடைய அறிவுரையைக் கேட்டுத்தான் ரஜினி நடக்கிறார் என்று பத்திரிகைகளில்தான் செய்தி வருகிறது. ஆனால் நான் கூறிய எதையும் ரஜினி கேட்டதேயில்லை. //

அந்த மாதிரி செய்தி உங்க பத்திரிகைல தான்னு அவருக்கு தெரியுமா??

//ரஜினிகாந்த் ஒரு படத்தைத் தொடங்கும்போது கதை, திரைக்கதை, உடன் நடிப்பவர்கள் என பல விஷயங்களைப் பல கோணங்களில் யோசிப்பார். பலர் சொல்லும் கருத்துகளைக் கேட்டுக்கொள்வார். ஆனால் இறுதி முடிவு அவருடையதாகத்தான் இருக்கும். //

ஏன்னா இப்ப எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருதான தயாரிப்பாளர் ... அவரு சேவிங் பண்ணுற காட்சிய மூணு மணி நேர படமா போட்டாலே, போட்ட காசு ஆயிரம் மடங்கா வருதுனா, மத்தவன் பேச்செல்லாம் மதிப்போமா..


//ரஜினியை போல்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும். பலருடைய கருத்துகளைக் கேட்டாலும் இறுதியாக முடிவெடுப்பவர் அவர்தான். ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தை குஜராத்தை விட ஒரு படி மேலாகக் கொண்டு சென்றுவிடுவார். அந்த அளவுக்குச் சிறந்த நிர்வாகி. //

பத்தாயிரம் பேரு வேலைபக்குற கம்பென்னிய வருசா வருஷம் ஐந்நூறு சதவீதம் லாபம் வர மாதிரி நிர்வாகிக்கிராரா... இல்ல சூறை விடுறதுக்கு கலர் பேப்பர் கட் பண்ணி தாரா ??

//அதோடு அவருக்கு மக்களின் மீது இருக்கும் அக்கறையும் ஒரு காரணம்.//

இதுக்கு நான் எதுவுமே சொல்ல முடியாதுங்க. எல்லாம் கேள்விபட்டேன்... அவர் ஏரியா மக்கள் தண்ணிக்கு ரெம்ப கச்டபடுறாங்க - நாலு மணி நேரம் வெயில நின்னு குழாய்ல தண்ணி பிடிக்கிராங்கனு கலைக்டேர் ட்ட மனு கொடுக்க போனாருன்னு ... மொத வேலையா அவர வரிசைல நின்னு ஒட்டு போட கத்துக்க சொல்லுங்க...

//அதற்காக ரஜினி அரசியலுக்கு வருவார் என என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் காயத்ரி அதில் உறுதியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பற்றி கூறுகையில்… ‘ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார்’ என்று அவர் கூறியதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்தேன்.
இன்னொரு விஷயம்… இதை வேறு எங்கும் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. சிலர் அரசியலுக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். ஆனால் ஒரு மனிதரை அரசியலுக்கு வாருங்கள் என்று மக்கள் தாங்களாகவே அழைப்பதை இங்குதான் காண முடியும். //

நான் அப்பவே சொன்னேன், அவரு மாட்டாருடா... அவரோட கல்யாண மஹால் அரசாங்கம் போடுற ரோட்டுக்கு இடைஞ்சலா இல்லடா... தலைவர் தெளிவானவரு... எல்லாரும் எஞ்சிநீரிங் காலேஜ் கட்டி கோடி கோடியா சம்பாரிக்கிரப்ப, அத தலைவரு நர்சரி ஸ்கூல் கட்டியே சம்பரிக்கிரவரு ...அத கேக்காம இந்த பன்னாடைங்க இன்னும் போஸ்டர் ஒட்டுரனுங்க...டேய் சீக்கிரம் நிப்பாட்டுங்கட... இல்ல தெலுங்கு மலையாளத்துல எல்லாம் இந்த மாதிரி புக்கு ரிலீசாகும் ...

// ஆரம்பத்தில் அவருடைய ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அடித்தள, நடுத்தர வர்க்கத்தினரும் அழைத்தார்கள். //

யோவ்.. நல்ல பாருயா.. எல்லாம் அதே பசங்க தான்யா... அவுங்க எல்லாம் மேல் தட்டுல இருந்து - உங்க சிவாஜி படம் டிக்கட் வாங்கின பின்னாடி அடித்தள நடுத்தெரு வர்க்கமா மாறுனவுங்க ..

//ரஜினியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை; //

நல்ல விஷயம் தான்.. ஆனா அவரது ரசிகர்களுக்கு தான் அவுங்க வீட்டு பசங்கள நீங்களோ இல்ல உங்க மனைவியோ நடத்துற பள்ளி கூடத்துல சேர்த்து படிக்க வைக்கணும்னு எதிர்பர்ர்ப்பு இருக்கு.

// எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் என்ற எண்ணமும் இருந்ததில்லை. ‘சிவாஜி’ படத்தின் வெற்றிக்குக் கூட ஷங்கர், ஏவிஎம் சரவணன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள்தான் காரணம் என அவர்களைத்தான் புகழ்ந்தார். //

நான் கூட கலைஞரோட காரண கரிசனமும், நீங்க ஆணை இட்டால் கங்கையையும் காவிரியையும் இணைக்க துடிக்கும் உங்க ரசிக பட்டாளம்னு நெனச்சேன்.

// சிறிய அளவு பணம், புகழ் சேர்ந்தாலே ஒருவரைப் பிடிக்க முடியாது. தலைக்கணம் ஏறிவிடும். ஆனால் ரஜினிக்கு பெரும் புகழ், பணம் இருந்தும் இன்னும் தலைக்கணம் வராமல் இருப்பதற்குக் காரணம் அவருக்குள் இருக்கும் ஆன்மிகத் தன்மையே. //

ஆமா அவரு வருசா வருஷம் பிறந்த நாளைக்கு ரசிகர்ல பார்த்து கொஞ்சி குலவுரறு..

//அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஊழலற்ற தலைமை உறுதியாக அமையும். //

அப்படியே வறுமை, வேலை இல்ல திண்டாட்டம் எல்லாம் ஒழியனும்னா சிம்ரனையும் ஜோதிகாவையும் முதலமைச்சர் ஆக்கனும்னு UN, உலக வங்கி கொடுத்திருக்கிற report-அயும் வாசிசுடுங்க ..

//மற்றபடி இந்தப் புத்தகத்துக்கு என்னிடம் இருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை. அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் உரிய மரியாதை செய்துவிட்டார்கள் என்றார் சோ.
விழாவில் சி.பி.. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் //

அவரோட வீட்டுக்கு சி பி வருமான வரி சோதனைக்கு - சும்மானாச்சுக்கும் - போயிருந்தா கூட எம்புட்டு நேர்மைய நடந்திருக்கும்னு இப்ப தெரியுது..

//‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தகத்தில் ரஜினிகாந்த் பற்றிய பல விஷயங்கள் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டுள்ளன என புகழாரம் சூட்டினர்.////

எங்க அப்பன் குதிருக்குல இல்லைன்னு சொல்லுறேன்... அப்புறம் என்னடா

//இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விஜயகுமார், ஷோபா சந்திரசேகர், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். //


பின் குறிப்பு: இந்த புத்தகத்தை தெரிந்தோ தெரியாமலோ வாங்கி படித்தோ படிக்கமலோ வைத்திருப்பவர்கள் - முடிந்தால் ஒரு ரெவியு எழுதவும் .

நன்றி : நண்பர் மண்வெட்டியான்
(http://manvettiyan.blogspot.com/ )

Saturday, March 01, 2008

ஓரின சேர்க்கை அவ்வளவு மோசமானதா ?

ஓரின சேர்க்கை அவ்வளவு மோசமானதா ?

ஒரு பதிவர் கேட்கிறார்:
"டா‍வின்சியின் படைப்புகளை ரசிப்பவர்கள் அனைவரும் அவரின் ஓரினப்புண்ர்ச்சியையும் ஆதரிப்பவர்களா?"

மற்றொரு பதிவரின் பதில் :
"ஆனால் அவரது படைப்புகளில் ஓரின சேர்க்கையை ஆதரித்து ஒரு சிறிய புள்ளியாவது இருந்தால் காட்டுங்களேன் பார்க்கலாம்."

இவைகளில் இருந்து 'ஓரின சேர்க்கை என்பது இயற்கைக்கு புறம்பானது என்பது போன்றும், அது கேவலமானது என்பது போன்றும்' சித்தரிக்க படுவது தெரிகிறது.

அடுத்தவர் மனைவயுடன் முழு விருப்பத்துடன் கொள்ளும் உடலுறவு கடுமையாக தண்டிக்க படக்கூடிய குற்றம் (IPC 497) ( அப்புறம் என்னவாம்னு கொதித்து எழும் கலாசார பதிவர்களுக்கு - தயவு செய்து எனது பதிப்புகளை படித்து உங்கள் ரத்த கொதிப்பை அதிகப்படுத்தி கொள்ள வேண்டாம் ) ) என்பது போன்ற ஹார்மோன் களுக்கு கட்டளை இடும் நவீன மனு நீதி உள்ள நாட்டில், ஹோமோ செக்சுவல் க்கு பத்து வருட தண்டனையோ - ஆயுள் தண்டனையோ வழங்கப்படும் என்பது போன்ற சட்டங்கள் இருப்பது ஆச்சர்யப்பட வைக்கவில்லை.

ஹார்மோன் குளருபடியாளும், குறோமசொம்களின் குழப்பதலும் பிற்ந்தவர்களை அரவாணிகள் என்று ஒட்டு மொத்தமாக சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி பாலியல் தொழிலாளர் களாக மாற்றி கொண்டிருக்கும் சமுதாயம், அதை அவர்களுக்கு உணர்த்தவேண்டிய கொடிப்பினை பெற்றவர்கள் நாட்டுக்கு மிக முக்கியமான விவாதமான 'hair style அவசியமா அவசியம் இல்லையா" என விவாதித்து கொண்டுக்கிருக்கின்றனர்.

மாறாக, அடுத்த window-வில் விக்கிபீடியா விலோ அல்லது வேறு எந்த தளத்திர்க்கோ சென்று ஓரின சேர்க்கை என்பது எவ்வளவு இயற்க்கயானது, மரபணு சார்ந்த, ஹார்மோன்கள் சாந்த பொருள் என்பதை வெகு எளிதாக தெரிந்து கொள்ள கூடிய நிலையில் உள்ள - இணையத்தில் உள்ள பதிவர்களின் அறியாமை அல்லது அறிந்து கொள்ள தேவை இல்லை என்னும் நிலையினை அடைந்தது ஆச்சர்யப்பட வைக்கவில்லை. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.