Friday, February 20, 2009

தமிழ் டுவிட்டர் ஓடைகள் - மறு பதிப்பு


நமது அரசியல் வியாதிகளின் தமிழ் டுவிட்டர் ஓடைகள்.

கருணாநிதி: உடன்பிறப்பே "அர்த்தமுள்ள இந்து மதம்" கழக ஆட்சில் நாட்டுடமை. மறவாதே !!

ஜெயா: பப்புவா நியு கினியா நாட்டில் நடந்த இரட்டை கொலைக்கு எனது கண்டனம்

ராமதாஸ்: சோனியா ஜி சமாதான படுத்தப்பட்டார். நிரந்தர சுகாதார அமைச்சர் பதவி எப்பொழுதும் ஒரு தமிழனுக்கே !

வைக்கோ: ஹல்லோ ஹல்லோ மைக் டெஸ்டிங்.

பிரணாப்: தமிழர்களின் எண்ணிக்கை உலகில் இரண்டு கோடிக்கும் குறையாமல் இந்தியா உறுதியாக பார்த்துகொள்ளும்.

அன்பழகன்: பிரணாப்பின் உறுதிமொழி மகிழ்ச்சி

சூப்புறமணிசாமி: தீட்சிதர்கள் ஒபாமாவுக்கு டியுசன் எடுத்ததற்கு ஆதாரம் கிட்டியது

மஹிந்த: ஜீ.. ஜீ ... பார்லிமேன்ட்டையும் கொழும்புக்கே மூவ் பண்ணிட்ட இந்த பசங்க ரகளை பண்ண மாட்டானுங்க.

தொங்கபாலு: அம்மாவை வணங்காத உயிரில்லையே! அம்சாவை போற்றாத நாள் இல்லையே


அழகிரி: எங்க அப்பு சர்வாதிகாரினு சொன்னதும் யாரும் என்னை பத்தி சொல்லிடுவாங்களோன்னு நெனெச்சேன். நல்ல வேளை :).

ஸ்டாலின்: திண்ணயில இப்பவே துண்ட போட்டு ரிசர்வ் பண்ணிட்டேன் !!

மண்மோகன்: டமில்... டமில் நாடு ..க்யா ஹை.. ???

சோனியா: வாட்ச் மென், நம்ம வீட்ல நாய்கள் ஜாக்கிரதை னு போர்டு மட்டப்பா !!காலங்காத்தால A4 பேப்பரோட வந்துடுரனுங்க

0 comments: