Thursday, May 28, 2009

அழகிரி அண்ணன் Vs மன்மோகன் சிங்

அழகிரிக்கு அமைச்சர் பதவி என்றதும் "பாரத" தேசமெங்கும் கார்டூன்கள் வெளியாகின்றன !! அவர் என்ன அவ்வளவு மோசமானவரா ?

படம் 1: 2009 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகள்


படம் 2: இதுவரை கலந்துகொண்ட மக்களவை தேர்தல்களும் அதில் பெற்ற வெற்றியும்




படம்
3: குடியிருப்பும் உறுப்பினராக இருப்பதும்


பின் குறிப்பு:
இது
வாரிசு அரசியலுக்கோ அல்லது தி. மு .க விற்கோ ஜால்ரா அடிக்கும் உடன் பருப்புகளின் பதிவு அல்ல. பாராளுமன்ற மேலவை போன்ற கொள்ளை புறத்து மக்கள் விரோதிக்காக வரையப்பட்டதே.

Wednesday, May 20, 2009

பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

பிரபாகரன் மரண செய்தி - தமிழன் மடையன்

திருத்த முடியாத தமிழனே, "இது யாராலயும் கண்டுபிடிக்க முடியாத பொய்" என்று நினைத்தா ஸ்ரீ லங்கா அரசாங்கம் தலைவர் உடல் என்று ஏதோ சோளக்காட்டு பொம்மை போன்ற ஒன்றை காட்டிக் கொண்டிருக்கிறது? அந்த இரண்டு நிமிட செய்தி காணொளியை பார்த்தபின் நமக்கு பத்து வினாடிகளில் தோன்றிய நாப்பது சந்தேகங்களும் சிங்கள ஆட்சியாளனுக்கு வராமலா போயிருக்கும் ??

அவர்களுக்க தேவை நம் சிந்தனையை - போராட்ட திசையை மற்ற வேண்டிய - வலுவிழக்க செய்யவேண்டிய செய்திகள். பரபரப்பு செய்திகள். அதற்காக அவர்கள் எந்த செய்தியையும் பரப்புவார்கள். அவர்கள் என்ன உண்மை செய்தியை மட்டுமே வெளியிடுவோம் என்று நம்மிடம் சத்தியம் செய்து கொடுத்தார்கள ?

சில மாதங்களுக்கு முன்பு தான் நமக்கு பாடம் கற்பித்தான். அணைகட்டு உடைத்து பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை புலிகள் அழித்து விட்டார்கள் என்று புரளி கிளப்பி, நமது உலக போராட்த்திற்கு ஒரு தடைக்கல் வைத்தான்.

கடைசி நாள் தாக்குதல்களில் பல்லாயிரகணக்கான மக்கள் கொல்லப்பட்ட செய்தியையும், நடேசன் போன்ற அரசியல் பிரிவு தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியையும் வலுவிழக்க செய்யவேண்டுமானால் அவர்கள் தனி ஈழம் தயார் என்று கூட செய்தி சொல்லுவார்கள். சின்ன கோடு, பெரிய கோடு தத்துவமும் தெரியாதா ?

இப்பொழுது நாம் ஈழத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களைப்பற்றிய சிந்தனை இன்றி அவர்களின் நிவாரணத்துக்காக போராட்ட சிந்தனை இன்றி, படுகொலை செய்யப்பட்ட மற்ற தலைவர்களை பற்றிய செய்திகளை எளிமைப்படுத்தி இரண்டு மணி நேரத்தில் டி.என்.எ பரிசோதனை சாத்தியமா என்று ஆராய்ச்சி செய்துகொடிருக்கிறோம். அவனுக்கு உதவுவது இந்திய அரசின் இளவுத்துறை மட்டும் அல்ல - நமது வடிகட்டிய முட்டாள் தனமும் குருநோக்கு பார்வையும் தான்.

Wednesday, April 22, 2009

ஏன் தந்தி - நியுரோ மன்னன் விளக்கம்.

ஏன் தந்தி - நியுரோ மன்னன் விளக்கம்.

உடன் பிறப்பே,

"எப்ப பார்த்தாலும் இந்த ஆளு ஏன் தந்தி அடிக்கிறாரு ?" னு நீயும் ஆதிமுக தொண்டன் மாதிரி பேச ஆரம்பித்து விட்டாயே. வேதனை படுகிறேன், உடன் பிறப்பே !
நானும் நாமும் தொடர்ச்சியாக இந்த நாட்டை ஆளும் கொடுமையான கடமையை செய்ய இந்த தந்தி தான் சிறந்த தொலை தொடர்பு சாதனம் என்பதை உனக்கு விளக்கி சொல்ல கடமை பட்டுள்ளேன். அது தான் எத்தனை முறை வேண்டுமானாலும் பல்ட்டி அடிக்க உதவும்.

இந்திய ராஜாங்கத்தில் மயிர் புடுங்கி மைய அரசு நடத்தும் தந்தி சேவை இரண்டே மொழிகளில் செயல் படுகிறது. ஒன்று ஆங்கிலம், மற்றொன்று இந்தி. "ஒன்றுமே நடக்கவில்லை" என்று எந்த பொடியனாவது தீக்குளித்தால் தலைவரின் இந்தி தந்தி தெளிவாக புரிந்து கொள்ள படவில்லை என்று நீ அவசரப்பட்டு தீ குளித்து விடாதே !

தந்தி சுருக்கமாக அடிக்கப்படுவது தான் மரபு. அதுவும் நமக்கு சாதகமாக அமையலாம்! . சோனியா விற்கு "help tamil speeking people" என்று நான் அடித்த தந்தி சோனியாவால் "ஹெல்ப் ராஜபக்சே" என்று புரிந்து கொள்ளப்படலாம், அவனும் தமிழ் பேசும் மற்றொரு நண்பர் தானே !

சோனியா ஜி ஒரு நடவடிக்கையும் எடுக்காவிட்டால்," தந்தி அக்பர் சாலையில் உள்ள அவரது அலுவலக முகவரிக்கு அடிக்கப்பட்டது. தமிழனின் கேட்ட நேரம் அவர் வீட்டை விட்டே வெளியே போகவில்லை என்று உனது கலைஞர் டி வி செய்தி ஆசிரியரிடம் சொல்லிவிடு தோழா !!

தமிழ் நாட்டில் உள்ள புறா க்கள் எல்லாம் அதி மு க மாநாடுகளுக்கு ரோஸ்ட் ஆக்க பட்டதால், தி மு க தொண்டர்களால் புறாக்களை புடித்து வர இயலவில்லை. அதன் காரணத்தால் தந்தி அடிக்கும் கொடுமையை இந்த வயதான காலத்தில் நான் செய்யவேண்டிய நிலைக்கு வந்து விட்டது. இந்த பாவம் அந்த அம்மையாரை சும்மா விடுமா என்பதை உன் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் !

இப்படியான காரணங்களில் ஒன்றோ இரண்டோ நம்மையும் நமது கழக ஆட்சியையும் பாதுகாக்கும் என்பது நீ அறியாதது அல்ல .

பின் குறிப்பு:

தொலை பேசியில் கற்புக்கரசி - படிதாண்டா பத்தினி - தூய்மையின் மொத்த உருவம் - அன்னை சோனியா விடம் பேச நேர்ந்தால் தலைவர் ஒன்னுக்கு போகிவிடும் அபாயம் இருப்பதால், தந்தி அடிப்பதே அவரை சுற்றி உள்ளவர்களுக்கு வசதி.

தலைவருக்கு ஆங்கிலம் வராது என்பதும் அவர் சார்ப்பாக சோனியா வுடன் ஆங்கிலத்தில் பேச தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களில் யாவருக்கும் அருகதை இல்லை என்பதும், நமது வருங்கால தகவல் தொடர்பு துறை அமைச்சருக்கு ஆங்கிலத்தில் எண்களை மட்டுமே உட்சரிக்க தெரியும் என்பதும் கொசுறு செய்தி.

Friday, February 20, 2009

தமிழ் டுவிட்டர் ஓடைகள் - மறு பதிப்பு


நமது அரசியல் வியாதிகளின் தமிழ் டுவிட்டர் ஓடைகள்.

கருணாநிதி: உடன்பிறப்பே "அர்த்தமுள்ள இந்து மதம்" கழக ஆட்சில் நாட்டுடமை. மறவாதே !!

ஜெயா: பப்புவா நியு கினியா நாட்டில் நடந்த இரட்டை கொலைக்கு எனது கண்டனம்

ராமதாஸ்: சோனியா ஜி சமாதான படுத்தப்பட்டார். நிரந்தர சுகாதார அமைச்சர் பதவி எப்பொழுதும் ஒரு தமிழனுக்கே !

வைக்கோ: ஹல்லோ ஹல்லோ மைக் டெஸ்டிங்.

பிரணாப்: தமிழர்களின் எண்ணிக்கை உலகில் இரண்டு கோடிக்கும் குறையாமல் இந்தியா உறுதியாக பார்த்துகொள்ளும்.

அன்பழகன்: பிரணாப்பின் உறுதிமொழி மகிழ்ச்சி

சூப்புறமணிசாமி: தீட்சிதர்கள் ஒபாமாவுக்கு டியுசன் எடுத்ததற்கு ஆதாரம் கிட்டியது

மஹிந்த: ஜீ.. ஜீ ... பார்லிமேன்ட்டையும் கொழும்புக்கே மூவ் பண்ணிட்ட இந்த பசங்க ரகளை பண்ண மாட்டானுங்க.

தொங்கபாலு: அம்மாவை வணங்காத உயிரில்லையே! அம்சாவை போற்றாத நாள் இல்லையே


அழகிரி: எங்க அப்பு சர்வாதிகாரினு சொன்னதும் யாரும் என்னை பத்தி சொல்லிடுவாங்களோன்னு நெனெச்சேன். நல்ல வேளை :).

ஸ்டாலின்: திண்ணயில இப்பவே துண்ட போட்டு ரிசர்வ் பண்ணிட்டேன் !!

மண்மோகன்: டமில்... டமில் நாடு ..க்யா ஹை.. ???

சோனியா: வாட்ச் மென், நம்ம வீட்ல நாய்கள் ஜாக்கிரதை னு போர்டு மட்டப்பா !!காலங்காத்தால A4 பேப்பரோட வந்துடுரனுங்க

Tuesday, February 10, 2009

விளிம்பு நிலை - களிம்பு நிலை மனிதர்களாம் !!!

நானும் இதோட ஏழு எட்டு 'நான் கடவுள்' விமர்சனம் படிச்சிட்டேன் - வலையில !! எல்லோரும் ஒரே மாதிரி விளிம்பு நிலை மனிதர்கள்-னு வாக்கியத்துக்கு வாக்கியம் எழுதுறானுங்க !! அது என்ன விளிம்பு நிலைனு யாராச்சும் சொல்லுங்கப்பா ??

இது என்ன புது ஜாதியா ?? கோடி கோடியா செலவழிச்சு நிலாவுல பலூன் விடுற அரசாங்கம், சுடுகாட்டு கூரைல இருந்து சவபெட்டி வரை கொள்ளை அடிக்கும் அரசாங்கம் உருவாக்கி வச்சிருக்கும் 'தாரள மயமாக்கல்' மற்றும் 'மூட நம்பிக்கைகளின்'
வாரிசான இந்த ஏழை எளியோருக்கு - பிட்சைகாரர்களுக்கு இப்ப புதுசா ஒரு பட்டம் "விளிம்பு நிலை" மனிதர்கள் !!

ஒரு சக மனிதனை மனிதனாக கூட மதிக்காமல் - அவனது உடல் ஊனத்தை கிண்டளைடிப்பதும், உதாசீன படுத்துவதும், சமூகத்தில் இருந்தே புறக்கணிப்பதையும் செய்துவரும் நம்மால் உருவாக்கப்படும் அவர்களுக்கு - நாம் அவர்களை விளக்கமாராக மாற்றிவிட்டு பின் அணிவிக்கும் பட்டு குஞ்சம் 'விளிம்பு நிலை மனிதர்கள்'.

"கோயில் உள்ள விடலாட்டி என்ன, அவங்களுக்குன்னு தனி கோயில் கட்டிட்ட போச்சு" னு விளக்கமளித்த காந்தி எப்படி சூத்திரர்களை ஹரிஜனம் சொன்னாரோ அதே மாதிரி தான் இந்த விளிம்பு நிலை மனிதர்கள் வார்த்தையும்.

இப்ப இருக்குற பொருளாதார சூழ் நிலைல - ஒபாமா அடுச்சு தள்ளுற பணத்துல - அண்ணன் மன்மோகன் சிங் புண்ணியத்துல சீக்கிரம் நம்மளும் அந்த விளிம்பு நிலைக்கு நம்மளும் வந்துடுவோம்றது எம்புட்டு தூரம் உண்மையோ ...!!! பயமா இருக்கப்பா !!!

வாழ்க வார்த்தை விளையாட்டுகள் !!!