Thursday, July 24, 2008

போலி-க்கு கிடைத்த தண்டனை ....

நண்பர்களே டோண்டு ஐயா அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது !! அதனை பற்றிய எனது கருத்துக்களை இங்கு வைக்கிறேன்.

அதற்குமுன், நான் பதிவுலகிற்கு புதியவன் என்பதையும், இந்த போலி பிரச்சனை பற்றிய அறிவு எனக்கு வெகு சமீபத்தில் தான் -அதுவும் வெகு சிறிய அளவிலே தான் கிடைத்தது என்பதையும் குறிப்பிட்டுவிடுகிறேன்.

டோண்டு அவ்ர்களை பற்றியும் மற்ற சிலரை பற்றியும் போலி தவறாகவும் அவதூறாகவும் பல வழிகளில் எழுதி இருந்திருக்கிறார். அது கொஞ்சமும் சந்தேகமின்றி அருவருக்கத்தக்க செயலே. அவர் நேர்மையாக, கருத்து மோதல்களை எதிர் கருத்துகளால் மட்டுமே எதிர்த்திருக்க வேண்டும். அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.

//மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. //

இதை படித்த பொழுது, மிகவும் வருத்தபட்டேன். ஒரு மேல்நாட்டு பழமொழி நினைவிற்கு வருகிறது. தமிழில் சொன்னால் "எதை எந்த அளவிற்கு விமர்சிப்பது என்பது முக்கியம். உன் நண்பனின் தோள் மீது இருக்கும் ஈயை விரட்ட கோடலியை வீசி விடாதே"

கொலை கேசில் சிக்கியவர் அவரது 'மடாதிபதி' வேலையே தொடர முடிகிறது; ஊறுகாய் வியாபாரியை ஏமாற்றியவர் சாவுக்கு அப்புறமே தீர்ப்பு வரும்படி பார்த்து கொள்ளப்படுகிறது; ஆனால் பாவம் ஒரு சில தனி மனிதர்களை தாக்கி எழுதிய மூர்த்தி போன்றவர்களுக்கு, அவை தகாதமுறையில் எழுதப்பட்டவை என்ற காரணத்திற்காக வேலை பறிக்க படுகிறது, கடவு சீட்டு பறிக்க படுகிறது !!!

பள்ளி அல்லது கல்லூரி மாணவன் ஒருவன் முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் மினஞ்சல் அனுப்பினால், அந்த மிரட்டலுக்கான உளவியல் காரணங்களை கொஞ்சமும் சட்டை செய்யாமல், அந்த மாணவனை தண்டித்தால் அது சரியான செயலா ?

பெரியாரை பற்றி, கொளத்தூர் மணி பற்றி விக்கி பீடியாவில் தேடி பாருங்கள். விஷமமான செய்திகள் மட்டுமே இருக்கும். ஏனெனில் அதை எழுதியவர்களின் சமூக பின்னணி அப்படி!! தாங்கள் பெற்றிருக்கும் முன்னேற்ற நிலையையும் அதன் மூலம் அடைந்த கணினி வசதிகளையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு சமுதாயத்தை கீழ்த்தரமாகவும், அதன் இழிவை நீக்க பாடுபட்ட தலைவர்களையும், அவர்களை பின்பற்றி பல ஆக்க செயல்களில் ஈடுபட்டு வரும் இந்நாள் தலைவர்களையும் தொடர்ச்சியாக நய்யாண்டி செய்து எழுதிவருபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா ? அவர்கள் எல்லோரும் போலி அவர்களின் இந்த செயல்பாட்டுக்கு ஒருவகையில் கூட காரணம் இல்லையா ?

இரு அணியினரும் போலி அவர்களின் பக்கங்களுக்கு சென்று அவற்றை படித்து - அவரின் ஹிட் கவுண்ட்-ஐ ஏற்றியதன் மூலம் மறைமுகமாக செய்தவை 'இந்த செய்கையை ஊக்கபடுத்தியதாகாதா ? ஏதோ ஒரு வகையில் நாம் எல்லாருக்குமே அவரது குற்றத்தில் பங்கு இருக்கிறது . ஆனால் பாவம் தண்டனை மட்டும் அவருக்கு.

Tuesday, June 10, 2008

உலக மயமாகும் உளறல்கள் ...

ச்சே.. தொலை காட்சி பெட்டி எப்பொழுதோ குப்பைகளை நடுவீட்டில் கொட்டும் தொல்லை காட்சியாக மாறிவிட்டது .. அது பத்தாதுன்னு இப்ப இணையமும் !! இந்த இன்டர்நெட் இணைப்பும், கணினி கீபோர்ட் விலையும் தாருமார இறங்குனாலும் இறங்குச்சு.. ஆளாளுக்கு பதிவு போடுறானுங்க... அதனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல - படிக்கிரவனுக்கு சொந்த அறிவு இருந்து பகுத்து அறிவும் இருந்து படித்து புரிந்து கொண்டால். ஆனா பாவம் நம்ம பசங்களுக்கு இந்த பொது அறிவு பகுத்து அறிவு எல்லாம் இருந்தா நம்ம நாடு இந்த நிலமைல இருக்குமா ??

எங்கெங்கு காணினும் அபத்தமாகவே இருக்கிறது...எங்கோ வெளி இடப்படும் அபத்தங்கள் எல்லா இடங்களுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பறக்கிறது ...
சாம்ப்ளுக்கு ஒன்னு ரெண்டு பாருங்க....

நண்பர் ஒருவர் அவரது பதிவில் குறிப்பிடுகிறார் ...

// XXXXXXX அவர்கள் அற்புதமான மேடைப்பேச்சாளர். அவர் ஒரு முறை
சொன்னார் நாம் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை. அது ஆங்கிலேயர்
களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது. பண்டைய தமிழ் மரபில் அவ்வழக்கம்
இல்லை!

அவர்கள் (ஆங்கிலேயர்கள்) ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் அடுத்த
வருடம் அவன் யாரோடு வாழப்போகிறானோ அல்லது அவள் யாரோடு வாழப்
போகிறாளே - ஒரு நிச்சயமற்ற தன்மை. ஆகவே ஒன்றாக இருக்கும்வரை
அதைக் கொண்டாடுவார்கள்//

ஆகா என்ன அற்புதம் !!! நம்ம ஆளுங்க அத கொண்டாடுகிறது இல்லைன்ற ஒரே காரணத்துக்காக, அதுக்கு ஒரு 'reverse இன்ஜினியரிங்' காரணம் வேற !!! நம்ம ஆளுங்கல நம்மாலே உயர்த்தி பேசிக்கிரதுக்கு இருக்குற ஒரே வழி - அடுத்தவன மட்டம் தட்டி பேசு. ஏதோ வெளிநாட்டில் இருக்குறவன் எல்லாம் வருஷம் வருஷம் வேற வேற துணை தேடிக்கிறது மாதிரி பேசு... இந்த லாஜிக்க அப்படியே வெள்ளை கார துரை நம்மல பார்த்து சொன்னா எப்படி இருக்கும் "தமிழர்கள் பொங்கல் என்று அறுவடை திருநாள் ஒன்றை கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பொங்கல் வைத்து உண்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அடுத்த அறுவடைக்கு நெல் விளைகிறதோ இல்லையோ என்ற கவலையும், பொங்கல் சாப்பிட அவர்களே உயிரோடு இருப்பார்களோ இல்லை எலி கரி தான் கிடைக்குமோ என்ற அச்சமுமே உள்ளது "

நான் லொள்ளு சபா ஒன்றை தளவிறக்கம் செய்து பார்த்து கொண்டிருந்தேன். அதன் விளம்பர இடைவெளியில் மற்றொரு நிகழ்ச்சியின் முன்னோட்டமாக ஒருவர் சொன்னது "பெண்கள் ஏன் நடு உச்சி எடுத்து தலை சீவுகிறார்கள் என்பது தெரியுமா ?? ஏன்னா உச்சிக்கு ஒரு பக்கம் இருக்குறது புகுந்த வீட்டையும், மற்றொரு புறம் வளர்ந்த வீட்டையும் நினைத்து பார்க்க "
இந்த மாதிரி அபத்த பேச்ச கேக்கவே சலிக்குது. இத ஒருத்தன் கேட்டு, அத ஒருத்தன் டயரக்டு வேற பண்ணி, அரை மணிக்கு ஒரு தடவை காது கூசும் அளவிற்கு ஒளிபரப்புகிறார்கள் ..

ஏன்டா டேய், ஏங்க சார், அப்ப உச்சி எடுத்து சீவாத எந்த பொண்ணும் பிறந்த வீட்டையோ புகுந்த வீட்டையோ மதிக்குறது இல்லையா ??? தமிழ் பெண்கள் ஒரு முப்பத்தஞ்சு கோடி தவற குறைந்தது இரநூற்றி அம்பது கோடி பேரு இந்த உலகத்துல இருப்பாங்களே சார்... அவுங்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடு கிடையாதா ?? இதெல்லாம் எங்க சார் படிக்கிறீங்க ?? சரி, எங்கயோ பழைய 'எட்டு தொகை , பத்து பாட்டுல கூட சொன்னதாக வே இருக்கட்டும் ... அப்படி சொல்லிட்டன்றதுக்காக அத மறு பரிசீலனையே செய்ய மாட்டீங்களா ??

மற்றொரு இடத்தில் ஒருவர் இந்தியாவில் அமெரிக்காவை போன்று நேர் கோடுகள் கிழித்து மாநில எல்லைகளை உருவாக்கி இருந்தால் நன்றாக இருக்குமல்லவா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் சொல்லுபவரோ அமெரிக்காவில் வெட்ட வெளிகள் அதிகம். ஆதலால் நேர்கோடுகள் போட்டுக்கொள்ள முடியும் ... இங்கு முடியாது என்று கூறுகிறார்.

ஆமாம், அமெரிக்கா இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடு. அதனால் இந்தியாவை விட வெட்ட வெளிகள் அதிகமே. ஆனா அங்கேயும் பல மாநிலங்களிலில் பறந்து ஆக்கிரமிக்கும் சில ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள பல மலை தொடர்களும், சில நூறு சதுர கிலோ மீட்டர் உள்ள ஏரிகளும், பாலை வனங்களும் உள்ளன...நிற்க..அமெரிக்கா முதலில் காலனி ஆதிக்க வாசிகளால் - அவர் அவர்கள் குடியேற்ற பகுதிகளை (பிரஞ்ச், ஆங்கிலேய, ஸ்பானிஷ் மற்றும் டச் காரர்கள் ) அவர் அவர் வசதிக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எல்லை பிரித்து கொண்டார்கள். பின்னர் ஆங்கில குடி வாசிகள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சுதந்திரம் வாங்கி, அதன் பின் மாற்ற மாநிலத்தவர்களை இணைத்து கொண்டார்கள். இவர்கள் யாரும் அமெரிக்கா பூர்வ குடி மக்கள் இல்லை. ஆனால் இந்திய அப்படி இல்லாமல், பல இன பூர்வ குடி மக்களை கொண்டிருந்ததால் மொழி வாரியான மாநிலம் தேவை பட்டது. ஒரு மொழி பேசுபவர் மற்றொரு மாநிலத்தில் சிறு பான்மையாக இருந்தால் அவர்களுது மொழி உரிமை நசுக்கப்படும் சூழல் ஏற்ப்படலாம் என்பதால். எனவே மாநில எல்லைகள் அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்டது ...

மற்றொரு இடத்தில் 'பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா?' என்று ஒருவர் கேட்க, அதற்கான பதிலில் 'ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது' என்று கூறப்பட்டுள்ளது !!

தமிழ் ஈழ அரசியல் அவ்வளவாக தெரியாத அல்லது நகைச்சுவைக்கவே பதிவுகளை படிக்கும் நபர் ஒருவர் இதை படித்தால் என்ன நினைப்பார். ஏதோ இந்திய ஈழ போராட்டத்திற்கு ஆதராவாக ராணுவத்தை அனுப்பியது போலவும், அதை பிரபாகரன் மறுத்து விட்டதை போலவுமே எண்ண சந்தர்ப்பங்கள் அதிகம் ..

பிரபாகரனின் அந்த நிலைக்கு பின் இருக்கும் எண்ணற்ற எவரும் மறுக்க முடியாத காரணகளை ( ஈழ பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியாக இலங்கை அதிபருடன் ராஜீவ் அவர்கள் - 'தமிழ் ஈழ போராட்ட குழு உறுப்பினர் ஒருவர் கூட இல்லாமலே அவர்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, அதன் முடிவை ஏற்க சொல்லி மிரட்டியது, அஹிம்ச்சை வழியில் போராடி சுதந்திரம் வாங்கியதாக மார்தட்டி கொள்ளும் ஒரு நாட்டின் அரசு அஹிம்ச்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை சாக விட்டது , மிரட்டலில் பயப்படாத காரணத்தலால் யாரின் சார்பாக இதுவரை நடந்து வந்ததோ - அவர்களின் மீதே படை ஏவியது - தமிழர்களை கொன்று குவித்தது.. இப்படி இருக்கும் அவ்வளவு வரலாறையும் )மறைக்கும் விதமாக எழுதப்படும் ஒரு விச பருக்கை தான் "ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்த நிலையில் அதை அனாவசியமாக கெடுத்து கொண்ட பிரபாகரனின் செயல் முட்டாள்தனமானது.

இவைகளை எல்லாம் இங்கு எழுதுவதன் நோக்கம், சிலர் பழைய - மூத்த பதிவர்களாய் இருப்பதால், அவர்களின் பதிவு பல தரப்பு மக்களால், மிகவும் அதிகமான மக்களால் படிக்க படுகிறது. அந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வரலாற்றை மறைக்கவும், திசை திருப்பவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கவும் பல சமங்களில் உபயோக படுகிறது. எனவே அவ்வாறான பதிவுகள் வரும் பொழுது அவற்றிக்கான எதிர்மறை கருத்துகளை பதிவு செய்வதும் தவிர்க்க இயலாதவையே.

Sunday, May 25, 2008

சபரி மலையும் ஜட்டியும்

 

சபரி மலையும் ஜட்டியும் ....

நேத்து நண்பன் ஒருவன் ஒரு செய்தி சொன்னான்.. அதை கேட்டபின்னாடி நம்ம நாட்ல நடக்குற காமடிக்கு அளவே இல்லாம போச்சூனு தோனுது. செய்தி இது தான் : இனிமேல் சபரி மலைல வேலபாக்குற பசங்க இனிமே ஜட்டி போட்டுட்டு வேலைக்கு போலாம்னு கோர்ட்டே தீர்ப்பு சொல்லிடுசாம். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் - தாங்களாக மனம் உருகி காணிக்கை ஆக்கி உண்டியலில் போடும் பணம் மற்றும் நகைகளை அங்கே வேலை பார்க்கும் நபர்கள் திருடி விடக்கூடாது என்பதற்க்காக, அவர்களுக்கு  அங்கு இருக்கும் 'சட்டம்' - ஜட்டி போட்டுட்டு வேலைக்கு வரக்கூடாது. வெறும் மெல்லிய வெட்டி தான்! நம்ம ஊரு காரனுங்க ரெம்ப புத்தி சாலி. இதற்க்காக கோர்ட் வரை போய் - இப்ப கோர்ட்டே ஜட்டி போடலாம், இனிமே புதிய  தொழிநுட்ப கருவிகளை உபயோக படுத்தி திருட்டை தவிர்க்கவும் னு தீர்ப்பு சொல்லி இருக்கு.

எளிமையாக, உலோக கண்டுபுடிப்பன் (metal detector) பயன்படுத்தி இதை தடுக்கலாம் என்ற அறிவு அந்த 'ஜட்டி கூடாது' என்று சட்டம் போட்டவனிடம் இல்லையா, இல்லை  நாம் போடும் சட்டங்களை மதித்து வேலைக்கு வந்தா வா - இல்லாட்டி நாங்க வேற ஆள பார்துக்குறோம் என்ற திமிரா, இல்லை வருடா வருடம் எட்டு கோடிக்கு மேல் உண்டியல் வருமானம் வரும் கடவுளை 'சில லட்சங்கள் செலவு செய்து  உலோக கண்டுபுடிப்பான் போன்ற வற்றை வாங்கி' ஏழை ஆக்கிவிட கூடாது என்ற நல்லெண்ணமா ??

தனது  கோவிலில் நடக்க கூடும் திருட்டுகளை கூட தடுக்க இயலாத கடவுள்,  உங்க பீரோவில்  இருக்கும் நகைகளையா  காப்பத்தபோறாறு ??  அப்படியே திருடு போனாலும் காவல் துறை "ஜட்டி போட்டு வந்து திருடர்கள் திருடினால் நாங்கள் பொறுப்பல்ல" னு சொன்னாலும் சொல்லும். கொடுமைடா சாமி!

----------------------------------

இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி...

நீங்கள், "இந்துக்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லைன்னு" கோவில்களில் அறிவிப்பு பார்த்து இருக்கீர்களா? நான் போன ஒரு சில கோவில்களில் மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. அங்க சமீபத்தில் (1873 அல்ல ) கூட  பார்த்திருக்கிறேன். இந்த அறிவுப்பு எதன் அடிப்படையில் செய்யப்பட்டு உள்ளது என்பது உனக்கு தெரிந்தால் சொல்லப்பா என்று என் நண்பன் கேட்டான். எனக்கு தெரியதால், இங்கு இருக்கும் இந்துகளுக்கு - மற்றும் இன்னும் தாங்கள் இந்துக்கள் என்று நம்பி கொண்டிருக்கும் நபர்களுக்கு - இந்த கேள்வியை சமர்பிக்கிறேன்!

இந்து மதம் என்பது உலகில் தோன்றிய பழமையான மதம் என்பதும், அந்த  மதமும் அதன் வேதங்களும் எழுதப்பட்ட பொழுது மற்ற மதங்கள் தோன்றி இருந்திருக்காது என்பதும்  குறிப்பிடத்தக்கது.  கோவிலுக்கு இந்துக்களுக்கே அனுமதி இல்லையாம், இதுல வெள்ளகாரனுக்கு என்னவாம்னு கேக்காதீங்க...!!

----------------------------------------------

Saturday, May 24, 2008

சுவிஸ் வங்கி கணக்கு சூட்சுமங்கள் ..!

நம்ம வெள்ளைகார தொரைங்க ரெம்ப புத்திசாலி. அவனுங்களுக்கு தெரியும் நம்மட்ட என்ன வீக் பாயிண்ட்-னு. அத வச்சு அவுங்க சரக்க நம்ம ஆளுங்க கிட்ட - முக்கியமா அரசியல் வாதிக கிட்ட -  விப்பானுங்க.வித்தலும் வாங்கினாலும் ரெண்டு பக்கமும் நல்ல லாபம் பாப்ர்ப்பது தான்  தான் என்று அவனுக்கு தெரியாதா..

'சார் இந்த திட்டத்துக்கு ஒத்துக்கங்க. எங்க கிட்ட ஒரு தொழில் நுட்பம் இருக்கு. அத வச்சு  உங்க ஊர்  காத்துல இருந்து கருவாடு தயாரிச்சு அத டப்பா நாநூருவானு விப்போம். உங்க ஊரு  காத்து தான் ரெம்ப நாரி போய் இருக்குறதால, உங்க ஊர்ல மட்டும் தான் இந்த தொழிற்சாலை லாபமா ஓடும்.  அத நீங்க உங்க ஊர்ல இருக்குற சூப்பர் மார்க்கெட்லே உங்களுக்கு புடிச்ச ரேட்டுக்கு வித்துக்கங்க'

'கருவாட அம்புட்டு காசு குடுத்து வாங்குவாங்களா'

' ஏன் மாட்டாங்க. எங்க ஆளு அதுக்கும் உதவி பண்ணுவாங்க' உங்க ஊரு சூப்பர் நடிகர் இல்ல கிரிக்கெட் காரனுங்க வந்து " இந்த கருவாட பாத்தபின்னாடி வெஜிடேரியனா இருந்த நானே கருவாடு சாம்பார் தான் சப்ட்றேன்னு ' னு ஒரு விளம்பரம் போட்டா எல்லாம் நடக்கும். அப்புறம் சரக்கெல்லாம் நீங்களே தான விக்குறீங்க. உங்க பிராண்டு தான? இனிமே சைட் டிஷும் உங்க பிராண்டு தான்'.

'கலக்கல். ஆனா நான் இந்த அதிகரிகள, புட் ரெகுலேசன் ல இருக்குற  பொரம்போக்குகள ...

'கவலைபடாதீங்க சார். உங்க கிட்ட ஒரு 10 கோடி ரூவாய்க்கு அமெரிக்கா டாலரா தந்திடுறோம். இந்த டீல முடிசிடுங்க'

"சரி, சமாளிச்சு பாக்குறேன். ஆமா டாலர வச்சு நான் என்ன பண்ணுவேன். ரூபாய கொடுத்துடுங்க "

"ஹிஹி.. அம்புட்டு காச நீங்க எப்படி சமாளிப்பீங்க... உங்க கிட்ட தான் ஊருக்கு ஒரு பங்களா, பங்களாவுக்கு ஒரு நடிகை, எஸ்டேட், காரு , தெருன்னு அம்புட்டும் இருக்கே... எதாவது வாங்குனா மாட்டிக்க மாட்டீங்க ... எப்பாவது எதிர்கட்சி காரன் ஆட்சிக்கு வந்தா என்ன ஆகும் "

"அதுவும் கரைகட்டு தான். நீங்களே அத நான் வச்சு என்ன பண்ணலாம்னு சொல்லிடுங்க"

" சுவிஸ் பேங்க் அக்கௌண்ட்ல போட்டுடுங்க"

"சார், நான் புது அரசியல் வாதி. இதெல்லாம் எனக்கு தெளிவா தெரியாது. உதவி செஞ்சீங்கன்னா நல்ல இருக்கும்"

"செஞ்சுட்டா போச்சு . இங்க பாஸ்போர்ட் காப்பி ஒன்னு போதும். அக்கவுண்ட் ஒப்பன் பண்ண. எல்லாம் போஸ்ட்லேயே முடிஞ்சிடும். எங்க ஊர் சட்டப்படி உங்க கணக்குல எம்புட்டு காசு இருக்குன்றத யாரிட்டையும் சொல்ல மாட்டோம். அதனால அந்த ஆண்டவனே வந்தாலும் கண்டுபுடிக்க முடியாது. உங்களுக்கு எப்ப காசு தேவைனாலும் உங்க  லோக்கல் பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொன்னா அதுக்கு அனுப்பிடுவோம். இல்லாட்டி நீங்களே எங்க பெங்க்குக்கு வந்து உங்க பாஸ்போர்ட்  காமிச்சு வாங்கிக்கலாம்"

"நீங்க அனுப்புற மன்த்லி ஸ்டேட்மென்ட் உளவு துறை கண்டுபுடிசிடுமே"

"அதெல்லாம் திரை கதைக்கு தான். உங்க ஊரு சுப்ரீம் கோர்ட்டு - ஏன் பார்லிமென்ட் தீர்மானம் போட்ட கூட நாங்க ஸ்டேட்மென்ட் அனுப்ப மாட்டோம். உங்களுக்கு வேணும்னா அனுப்புவோம். "

"எனக்கு அனுபிச்சுடதீங்கப்பா.. நான் வரி கட்டாத பணத்தையும் போட்டுக்கலமா, இந்த அக்கவுண்ட் லேயே"

"சார், அதுக்கு தான் இந்த மாதிரி அக்கவுண்டே நாங்க வச்சிருக்கோம் . எங்க சட்டப்படி நீங்க வரி கட்டமா எம்புட்டு காச வச்சிருந்தாலும்  - அது சட்டப்படி குற்றமே இல்லை. ஆனா வரி கட்டுறப்ப பொய் சொல்லி மாட்டிகிட்டா தப்பு "

"புரியலப்பா "

"இப்ப நீ வாங்க போற கோடி ரூவாய யாரு கண்ணுலையும் படமா வரி கட்டாம வச்சிருந்தா தப்பு இல்ல. ஆனா என்னிக்காவது நீ வரி கட்டுறப்ப சிவாஜி படம் பாக்க வச்சிருந்த பணம் ஒரு கோடி , அதுக்கு வரினு நாப்பதாயிரம் கட்டுறீங்கனு வச்சுகோங்க, அது தப்பு."

"நல்லா இருக்கேப்பா உங்க ஊரு சட்டம். எனக்கு சீகிரமா ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு அதுல அந்த காச போட்டுருப்பா. " நீங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னடி ஒரு கேள்வி ??

என்னது ?

யாருக்கும் சொல்ல மட்டீங்கள ?

சார், இந்த ஒரே மேட்டர வச்சு தான் எங்க நாடே கோடீஸ்வர நாடா இருக்கு... உங்க எல்லபேறு காசும் எங்க கிட்ட பத்தரமா இருக்கு. அத வச்சு நாங்க இன்சூரன்சே, லோன் னு சம்பரிப்போம் ...அதனால பேங்க் எல்லாம் பெரிய பணக்கார நிறுவன இருக்கு..

ஆனா எனக்கு ஒரு டவுட்... இதே மாதிரி அக்கவுண்ட் தான் நீங்களும் வச்சிருக்கேங்களா ?

நாங்க உங்க அளவுக்கு அதிர்ஷ்ட சாலி இல்லை சார். எங்க கோர்ட் ஆடர் போட்டா,  எங்க பேங்க் விவரத்த போலீச்ட்ட சொல்லி ஆகணும். எங்க ஊரு ஆளுங்களுக்கு எல்லாம் இது பாதுகாப்பு கிடையாது ...

ஆனா நீ சுவிட்சர்லாந்துகாரன் கிடையாதே...அமெரிக்ககாரன் தானே ???

மொதல்ல எங்களுக்கும் அதே பாதுகாப்பு தான் இருந்துச்சு. இப்ப தான் எங்க நாடு சுவிட்ச்ர்லந்துட்ட பேசி 'எங்களுக்கு வங்கி  விவரம் சொல்லல' நடக்குறதே வேரனு சொல்லிடுச்சு... அதனால அம்புட்டு பாதுகாப்பு இல்ல .

அட பாவமே.. அமெரிக்கா காரன் எல்லாம் அரசியல் வாதியாக இருந்தா பாவம் போலியே ...
ஆமாம் சார், அமெரிக்கா மட்டும் இல்ல, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாதிரி சண்ட போட்டு ரகசியம் தெரிஞ்சுகிற உரிமைய வாங்கிடுச்சு...

அப்ப   நாங்க மட்டும் தான் லக்கியா ?

அப்படியும் சொல்லலாம். எங்க ஊர்ல வரி ஏய்ப்பு எல்லாம் கஷ்டம் சார். எல்லாம் கண்டு புடிசிடுவாங்க. அப்புறம் சட்டம் எல்லாம் தன் கடமைய வேகமா செய்யும். அதனால மாட்டுனா தப்பிகிறது கஷ்டம்ன்றதால நாங்க இதெல்ல்லாம் ரெம்ப பெரிசா எடுதுகிறது கிடையாது. எங்க ஊர்ல தொழில் அதிர்பர்களுக்கு மட்டும் தான் இந்த வசதி. அதுவும் சட்டபூர்வமாக . நீங்க ரெம்ப லக்கி சார். உங்க ஊர்ல லஞ்சம்  வாங்குறது ஈசி, கொடுக்குறது யாருக்கும் தப்புனே தெரியாது, மறைக்குறது ஈசி, அப்படியே மாட்டுனாலும்  உங்க பேரன் கூட உயிரோட இருக்கா மாட்டான் - தீர்ப்பை பாக்குறதுக்கு. எங்க பெங்க்குக்கு இந்த மாதிரி நாடுகள் தான் உலகத்துல வேணும்...

ஹிஹி... அப்புறம் சார், எதோ உங்க ஊர்ல தொழில் அதிபர்களுக்கு சலுகைன்னு சொன்னேகளே.. அது என்ன ?? ஏன்னா  என் பய்யன் தொழில் அதிபரா ஆகபோரான் ...உபயோகமா இருக்கும்ல

உங்க பய்யன் ஒரு 10 கோடி வச்சிருப்பாரங்க  சார் ?

சார் விளையாடதீங்க.. அது அவன் வச்சிருக்குற கார செகண்ட் ஹெண்ட்ள வித்தலே வரும் ...

நல்லதா போச்சு. எண்ட அம்புட்டு சொத்து இருக்குன்னு அவர் கான்பிசாருனு வச்சுகோங்க - மால்டா, மொனாகோ, போர்ச்சுகல் எப்படி நெறைய நாடு இருக்கு...  அவுங்க பணகரனுங்களுக்கு உடனடியா வரவேற்ப்பு கொடுத்து அந்த நாட்டு பாஸ்போர்ட்டையும் கொடுத்துடுவாங்க ...அப்புறம் நீங்க அங்க இருக்கணும்னு எல்லாம் கூட அவசியம் இல்ல. வருஷம் ஒரு தடவ போன போதும். இதுக்கப்புறம் னெங்க உலகத்துல எந்த மூலைல இருக்குற சொத்த வித்தாலும் அந்த நாட்டுக்கு அதோட லாபத்துல வரி கட்டனும். ஆனா, இந்த மாதிரி தொழில் அதிபர்களுக்கு  கட்ட தேவை  இல்ல னு சட்டம் போட்டிருக்காங்க. அதனால நீங்க வரி கட்ட தேவை இல்ல. நாடும் காசும் தான் மாறுமே ஒழிய, கான்சப்ட் மாறது ...

எனக்கு இம்புட்டு உதவி செய்யுற..உனக்கு, என்னால எதுவும் பன்னமுடியலையே யப்பா ....
என்ன பண்றது சார். எங்க சட்டம் அப்படி. நாங்க உங்ககிட்ட பண்ணுறத, எங்க கிட்ட பண்ணுறதுக்கு  ஜெர்மன் நாட்டுக்கு  பக்கத்து நாடான லீச்ட்டேன்ச்டைன் முயற்சி பண்ணுது. அத விட போறது இல்லனு எல்லாரும் ஒத்தகாலுல இருக்கோம்... அது என்ன ஆகுதுன்னு பாப்போம். லக் இருந்தா நாங்களும் அங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி வைப்போம் ...

சரிங்க சார், உங்க உதவிக்கு நன்றி ... ரெண்டு நாள்ல தகவல் சொல்லுறேன் .

Friday, May 23, 2008

படங்களால் ஒரு செய்தி - அனானிக்கு அர்பணிப்பு !!

எனது "இந்தியன் என்பதில் பெருமைப்படு ??" என்னும் பதிவை பார்த்துவிட்டு, பதிவை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாமல், கொதித்து எழுந்து என்னை திட்டிய, அன்றில் இருந்து இன்று வரை அதே பின்னூட்டை எல்லா பதிவிலும் இடும், அனானிக்கு இந்த பதிவு அர்பணிப்பு.



அவர் ஆங்கிலத்திலே பின்னோட்டம் இடுவதால் - அவருக்கு தமிழ் படிப்பதில் சிரமம் இருக்கும் என்று கருதுவதாலும், இந்த படங்களில் தமிழ் இல்லை என்பதாலும், அவர் இதை எளிமையாக புரிந்து கொள்ளுவார் என்ற நம்பிக்கையில் ...

காலம் காலமாய் நிற்க வைக்கும் மண்ணெண்ணெய் விநியோகம் ...



ஒன்றிரண்டு வேலை வாய்ப்பிற்காக ஆயிரகணக்கான நபர்கள் அலுவலக வெளியே நிற்கும் நிலைமை ..
அடுத்த கும்பகோண நிகழ்வாய் எங்கெங்கும் இருக்கும் பாதுகாப்பு இன்மை ..

ஒவ்வொரு நிமிடமும் வெடிக்கும் வன்முறை...

மழைக்கு கூட தயாராக இல்லாத நிலைமை ....


இவைகள் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் வாகளிக்கும் ....

ஆனால் கிடைப்பதோ ....

30 bil

Defence budget news

defencebudget


lockheed

isro budget

நன்றி, அனானி அவர்களே !!!

துக்ளக் இதழ் படிப்பவர்கள் எனது வேண்டுகோளை கொண்டு போய் செர்ப்பார்களா?

 

இன்று டோண்டு ஐயாவின் ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அவர் தினகரன் மூலம் தெரிந்து கொண்ட பாடத்தை பற்றி பேசி இருந்தார். மிக சரியான ஒன்று. அதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. விமானத்தில் பயணிக்கும் போது ஆபத்து நேரத்தில் ஆக்சிஜன் முகமூடி அணியும் போது கூட முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின் தான் உங்களது குழந்தைக்கு கூட உதவவேண்டும் என்று சொல்லுவார்கள். நிற்க. இந்த பதிவு அவரது கருத்தை பற்றி இல்லை. அவர் எடுத்து கொடுத்திருந்த துக்ளக்கின் செய்திகளை பற்றி. 

ஒரு மிக மோசமான வன்முறை நிகழ்வு நடந்து விட்டது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக பொது மக்களை பழி வாங்கிய வன்முறை நிகழ்வு. மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு சிலரின் உயிர் ரவுடிகளால் அநியாயமாக பறிக்கபட்டது. கொடூரமான செய்தி. மிருகத்தனமான வெறி செயல்.  நாம் இன்னும் நாகரீகத்தில்  காட்டு  மிராண்டிகள் என்று எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை தெரிவித்த தருணம்.

காந்தி சுட்டு கொள்ள பட்ட போதும்,  இந்திரா காந்தி காந்தி சுட்டு கொள்ள பட்டபோதும், விவசாய கல்லூரி மாணவிகள் கொளுத்தப்பட்ட போதும் , மாஞ்சோலை தொழிலாளர்கள் கொள்ள பட்ட  போதும், இதே போல் நூற்று கணக்கனமுறை பல்வேறு நேரங்களில்  பல அப்பாவி மக்கள் குண்டர்களாலும், காவல் துறை துப்பாக்கி சூடு - அடக்குமுறை களாலும் உயிர் இழந்துள்ளனர். இவைகளில் இருந்து எந்த அடிப்படையிலும் தினகரன் உயிர் பழி வேறுபட்டதல்ல. ஒவ்வொரு முறையும் பலியாகும் கூட்டம் மட்டுமே மாறும். பலனடையும் கூட்டம் ஒன்றே.

இப்படி பட்ட சம்பவத்தை - அது நடந்து ஒரு வருடம் ஆனதை ஒட்டி வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டதாக ஒரு இடுகை. சமூக பொறுப்பான இதழ் - அதன் நினைவு தினத்தை ஒட்டி எத்தனை பற்றி எல்லாம் பேசி இருக்கலாம் ??

இத்தகைய படுகொலைகளுக்கு எல்லாம்  அடிப்படை  காரணமாகிய   - அரசியல் ஆதாயம். பதிவி வெறி. 'வெள்ள நிவாரண சீலை பெறுதல்' போன்ற கொடூரங்களில் மக்களின் ஏழ்மை. தனது பிறந்த நாளை முன்னிட்டு சீலையை தூக்கி எரிவதில் இருக்கும் திமிர் மற்றும் சக மனிதனை கேவலபடுத்தும் எண்ணம் ,  ஐந்து ரூபாய்க்காகவும் பிரியாணி பொட்டலதிர்க்ககவும் கூடும் - சோடா புட்டி எடுத்து எரியும் வேலை இல்லாத, அறிவு இல்லாத மூடர்கள் கூட்டம். இவைகளை பற்றியும் அவைகளை   களைவது பற்றியும் பேசி இருக்கலாம்.

அதனால் பாதிக்க பட்ட குடும்பங்கள் - அதன் பாதிப்பில் இருந்து எவ்வளவு தூரம் மீண்டுள்ளன, நிவாரணம் கிடைத்ததா, அந்த கொடிய  செயலை செய்தவர்களை காவல் துறை கண்டுபித்ததா, விசாரணை நிலை என்ன ? இப்படியான ஆராய்ச்சி கட்டுரை எழுதி இருக்கலாம்.

அல்லது, இந்த நாளை 'அரசியல் வன்முறையில் இருந்து விடிவு' நாளாக முன்மொழிந்து, எல்லா அரசியல் வாதிகளையும் 'இனி எந்த ஒரு காரணத்திற்காகவும் வன்முறையில் ஈடுபட மாட்டோம்' என்று தங்களு தொண்டர்களையும் தலைவர்களையும் ஊர்வலமாக போக சொல்லுமாறு கேட்டு கொண்டிருக்கலாம்.

இப்படி ஏதேனும் ஒன்றை செய்யும் இதழாக நமது துக்ளக் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் !!! ஆனால் அவர்களுக்கு தெரிந்ததோ தினகரன் என்னும் வியாபார நிறுவனம் வெளி இடா நினைவு அஞ்சலி.

எந்த வார இதழில் அரசியல் வாதிகள் தங்களது படமோ அல்லது கருத்து படமோ  வந்தால் தங்களின் அரசியல் வாழ்க்கையின் பிறவி பயனை அடைந்து விட்டதாக  கருதுவார்களோ, எந்த வார இதழ்  பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள்  எழுதியவற்றிக்கு பின் இருக்கும் ஒரே அரசியல் பைபிலாக கருதபடுகிறதோ,
எந்த வார இதழ் நேற்று, இன்று, நாளை என்று எப்பொழுதும் ஐநா சபை முதல் வார்டு மெம்பர் வரை உள்ளவர்களுக்கு வழிகாட்டியாக தெரிகிறதோ, அந்த வார இதழாகிய துக்ளகிற்கு  இந்த  சாமானியனின் இந்த சின்ன எதிர்பார்ப்பை வேண்டுகோளை  கொண்டு போய் சேர்ப்பீர்களா, நண்பர்களே ?


பின் குறிப்பு: தலைப்பில் 'படிப்பவர்கள்' என்று பன்மையில் இருப்பது சொல் குற்றமா பொருட் குற்றமா என்று ஆராய வேண்டாம்.

Thursday, May 22, 2008

புதிய சித்திர புத்திரனின் விவாதங்கள் - பகுதி 1

 

முன் குறிப்பு: சித்திர புத்திரனின் விவாதங்கள் என்ற தலைப்பில் பெரியார் சிலருக்கு இடையில்  ( எடுத்து காட்டாக  : ஒரு சிறுவனுக்கும்  அவனது தந்தைக்கும் இடையே  நடக்கும்   - கையில் டாலர் கட்டினால் பரிட்சையில் தேர்வாகி விடலாம், மயில் இறகு குட்டி போடும் போன்ற ) நடக்கும்  விவாதங்கள் மூலம் தனது கருத்துகளை நகைச்சுவை உடன் சொல்லி இருப்பார். அது போல நம்மளும் எழுதினால் என்ன என்று தோன்றியதன் விளைவு இது. பெரியார் விவாதங்களில் மகனின் / மகளின்  மூட பழக்கங்களுக்கு அம்மா / அப்பா விளக்கம் அளிப்பார். இங்கு சமயத்தில்  தலைகீல்.

இளைஞன்: அப்பா, நம்மாளால் நாட்டு மக்களை வறுமையில் இருந்து காக்க முடியுமா ?
அப்பா: தெரியலையேடா.. முடியாதுன்னு தான் நினைக்கிறேன்.

இளைஞன்: அப்பா, நம்மாளால் நாட்டு மக்களை நோய் நொடியில் இருந்து காப்பாத்த முடியுமா ??
அப்பா: அரசு மருத்துவ மனைகள் இருக்குற லட்சனத பத்தி நீ கேள்வியே பட்டது இல்லையா ? பேப்பர் படிடா... போது அறிவ வளைத்துக் கோடானு எம்புட்டு தடவ சொல்லியும், நீ கேக்கலைல ?

இளைஞன்: ஜாதி அடக்கு முறைகளில் இருந்து தாழ்த்தப்பட்டவர்களை காப்பாத்த முடியுமா, அப்பா ?
அப்பா: ஏழு செங்கள நகட்டினதுக்கு யாரு யாரெல்லாம் சப்போர்ட்டுக்கு வரானு நீ செய்தியே பாக்கலையா மவனே ?

இளைஞன்: எம்.பில், எம்.எஸ்ஸி னு படிச்சுட்டு கபாடி விளையாடுரவனுங்கள வேலை இல்லா திண்டாட்டம் பிச்சகாரனா  ஆக்க போறதுல இருந்து காப்பாத்த முடியுமா ?
அப்பா: முடியாதுதான்....

இளைஞன்: இப்படி மக்களை எதுல இருந்தும் காப்பாத்த முடியாத நாம், 'கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஜாதியையும்' காப்பாத்த இம்புட்டு கஷ்ட படுரமே , ஏனப்பா ?
அப்பா: ????

இளைஞன்: ஏன்னா அது ரெம்ப ஈஸி. 'எந்த பய்யண்டயாவது பேசுறத பார்த்தேன்' வெளாசி புடுவேன்னு சொல்லுறது ஈஸி. வெக்கம் மானம் சோத்துல உப்பு தான போட்டு சாப்ப்புடுறனு' பேசுறது ஈஸி. பொண்ணுக்கு கற்பு தான் பெருசுன்னு சொல்லுறது ஈஸி. பொண்ணுக்கு மட்டும் தான் கற்ப்பா-னு கேட்டாலோ - அந்த கற்பு போனா என்னனு கேட்டாலோ -அடி, உதை, நாட்டுல இருக்க நுகர்வோர் கோர்ட்டுல இருந்து சுப்புரீம் கோர்ட்டு  வரை கேசு ????
அப்பா: என்ன பேச்சுடா பேசுற..

இளைஞன்:
உருப்படியா எதையும் - யாரையும் காப்பாத்த முடியாத நாம: - கப்பாத்துறேன்னு ஒத்த காலுல நின்னு அடம் பிடிக்கிறது -அருவா எடுக்கிறது - எல்லாம் கலாச்சாரத்தை காப்பாத்த தானே!! அத இம்புட்டு கஷ்டப்பட்டு காப்பாத்துனதுக்கு   சாட்சியா  HIV நோயாளிகளோட எண்ணிக்கையும், பெண்கள் காவல் நிலையமும், குடும்ப கோர்ட்டும், ஸ்டவ் வெடிப்பும், நடமாடும் நகை கடைகளும், திருமண முறிவு ஆனவர்கள் - தனியாக மேட்ரிமோனியல் சைட் போட்டு துணை தேடும் அவலங்களும், மகளை கொளுத்தும் அப்பன்காரங்களும், அப்பனை ஏறெடுத்து பார்க்காத மகன்களும், தேனிலவு கொலைகளும் சாட்சியாக இருக்குன்னு சொல்லுறேன்.
அப்பா: உன்னைய படிக்க வச்சதுக்கு எனக்கு இதுவும் வேணும் ... இன்னும் வேணும் ....நல்லா நிப்பாட்டாம பேசுற... பாட புக்க தவற எல்லா எழவையும் படிக்கிற ..எல்லாம் அதனால வந்த வினைடா...

இளைஞன்: அப்பா நான் ஒரு பொண்ணை காதலிச்சா என்னப்பா பண்ணுவீங்க ?
அப்பா: டேய், என்ன அப்பன்ட்ட பேசுற பேச்சா.... எல்லாம் உங்க அம்மா கொடுக்குற செல்லம். அவ வரட்டும், வச்சுக்கிறேன்.  படிக்குற வயசுல காதல் கீதல்னு கெட்டு போகாத ... எல்லாம் வயசு கோளாறு சொல்லிபுட்டேன் ... எல்லாம் சேர கூடாத பய புல்லைகட்ட சேந்ததால வந்த வினை... இனிமே இத மாதிரி பேசினா - கை கால உடச்சு புடுவேன் ...

இளைஞன்: சரிங்கப்பா, இனிமே இதமாதிரி பேசமாட்டேன். கடைசியா ஒன்னே ஒன்னே சொல்லிக்கிறேன்.
அப்பா:என்ன ?

இளைஞன்:
மொதள்ள படிப்பு, அப்புறம், வேலை, அப்புறம் வீடு, அப்புறம் காரு, அப்புறமா காதல் -னு ஒன்னொன்னா வருசயா ஆர்டர் பண்ணறதுக்கு வாழ்க்கை ஒண்ணும் முனியாண்டி வில்லாஸ் பரோட்டா ஸ்டால் கிடையாதுப்பா!!

------------------------------------------------------------------------

இளைஞன் 1: ஏண்டா மாமு, ஒருவனுக்கு ஒருத்தின்னு பக்கம் பக்கமா கட்டுரை எழுதுரானுங்க. ஆனா அதே புக்குல இந்த நடிகர் இந்த நடிகை ஓட சுத்துராறு, அந்த நடிகர் அவாளோட சுத்துராறுனு எழுதுரனுங்க. அப்புறம் ரெண்டு வாரம் கழிச்சு அவரு இப்ப இவளோட சுத்துராறுனு எழுதுரனுங்க ....இந்த ஒருவனுக்கு ஒருத்தி - நம்மள மாதிரி இழிச்சவாயனுக்கு மட்டும் தானா ?
இளைஞன் 2: நீ சொல்லுற ஒருவனுக்கு ஒருத்தி பத்தி எனக்கு தெரியாது.  அந்த புக்குல எல்லாம் நடுப்பக்கம் படம் பாக்குரதோட  நிப்பாட்டிக்க. படம் பாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா என்ட்ட சொல்லு  - நல்லா புக்கா நான் வாங்கி அனுப்புறேன். சரி அத விடு.. ஆனா ஒருவனுக்கு ஒருத்தின்றது - ஒருவனுக்கு ஒரு சமயத்தில் ஒருத்தி - அதே மாதிரி ஒருத்திக்கு ஒரு சமயத்தில் ஒருத்தின்னு தான் உலகம் ஓடிட்டு இருக்கு. அதனால தான் உலகத்துல இருக்குற கிட்ட தட்ட அம்புட்டு நாடும் திருமண ரத்து - மறுமணம் எல்லாம் ஏத்துகிட்டு இருக்கு. நீ சொல்லுறது ஏதோ விஜய் பட டயலாக் மாதிரி இல்ல இருக்கு: காதல்ன்றது ஒரு தபா தான் வரும் - ரோஜாப்பூ தும்பைப்பூ மாதிரி. அதே மாதிரி  இல்ல இருக்கு நீ சொல்லுற ஒருத்தனுக்கு ஒருத்தி.  ரோட்டுல நடந்து போய்ட்டு இருக்க பொண்ண ஆசிட் காமிச்சு அவசர பட்டு கண்ணாலம் பண்ணினாலும் சரி, அருவா முனையில் அல்லது  மண்ணெண்ணெய் கேன் பயமுருத்தலில் கல்யாணம்  பண்ணி வைக்க பட்டாலும் சரி -  அவனோடவோ அல்லது அவளோடவோ  வாழ்ந்தே தீரனும்னு சொல்லுறது மாதிரி இல்ல இருக்கு .  சொல்ல போனா,  ஒருவனுக்கு ஒரு சமயத்தில் ஒருத்தின்னு சொல்லுறது கூட செயற்கையானது தான். நமக்கு அது தான் நல்லது - உன் குடும்பம் - உன் குழந்தைனா தான் உனக்கு பொறுப்பு வரும் ... அப்பா தான் நீ உன் துணையையும் உன் வாரிசையும் காப்பாத்துவைனு  ஏற்படுத்தப்பட்டது தான்.

இளைஞன் 1: அதனால ?
இளைஞன் 2: அதனால... சொரக்காயிக்கு உப்பு இல்லையாம்!!!  இதுக்கு மேல பேசினா - நான் இதுவரை எழுதுனத விட பெரிசா அனாநிகளோட பின்னூட்டம் இருக்கும். அவுங்கள கஷ்டப்படுத்த வேணாம்னு நிப்பாட்டுறேன்.

Tuesday, May 20, 2008

உள்ளூர் ஆதரவும் உலக ஆதரவும் ...!!

இலங்கை இன பிரச்சனையைப் பற்றி சில தலைவர்கள் பேசுவதை கேட்க நேர்ந்தது. அது இலங்கை விமான படை ஈழம் மீது குண்டு மழை பொழிந்து தமிழ் ரத்தம் குடித்து கொண்டு இருந்த நேரம். ஒரு தலைவர் மிக ஆக்ரோசமாக அதை கண்டித்து பேசும் போது அவர் சொன்ன வாக்கியம் " இப்படியாக குண்டு மழை பொழிந்து, தமிழர் இனத்தை அழிக்க இலங்கை இராணுவம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதை எல்லாம் உலக நாடுகள் பார்த்து கொண்டே இருக்கிறது". 'பார்த்து கொண்டிருக்கும் உலக நாடுகள் ஒரு நாள் நமக்கு உதவ வரும்' என்ற தொனியில் அவர் பேசியதாக எனக்கு பட்டதால், அவைகள் மீதான பார்வையே இந்த பதிவு.

இன்றைக்கு உலக நாடுகள் என்று யார் கூறினாலும் அவை அரசியல் அதிகாரமிக்க , ராணுவ பலமிக்க, கிட்ட தட்ட தன்னிறைவான சொற்ப நாடுகளையே - அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற சில நாடுகளை மட்டுமே குறிக்கும். மாற்ற நாடுகள் நமக்கு அதிக பட்சம் தார்மீக ஆதரவை மட்டுமே தர இயலும். இந்த தார்மீக ஆதரவு - இதயத்தில் இடம் - எல்லாம் கவிதை எழுத மட்டுமே உதவும் .

இந்த சொற்ப நாடுகள் அனைத்தும் ராணுவ வழியில் இணைந்து கொண்டு NATO என்னும் அமைப்பை ஏற்படுத்தி கொண்டன - அமெரிக்கா தான் அதன் வித்தகர் என்பதை சொல்ல தேவை இல்லை. அமெரிக்கா வின் ராணுவ வரவு செலவு திட்ட செலவு என்பது - அதற்கு அடுத்த நிலையில் உள்ள பதினைந்து நாட்டு ராணுவ செலவுகளின் கூட்டு தொகையை விட அதிகம் அல்லது வேறொரு முறையில் சொல்ல வேண்டும் என்றால் 'அமெரிக்க ராணு தொழில் துறை என்பதை தானியாக ஒப்பிட்டால், அது மட்டுமே உலகின் பதினொன்றாவது பெரிய பொருளாதார மண்டலம். இந்த ராணுவ பலம் என்பது அவர்களுக்கு மிக அவசியம் - வல்லரசாக தொடர்வதற்கு, மாற்ற நாடுகளை நேரடியாகவும் மறைமுகவகவும் ஆள்வதற்கு, அவர்களது பொருளாதார கொள்கைகளை எல்லோரையும் ஏற்றுக்கொள்ள செய்வதற்கு.

இவர்களின் இவ்வளவு செலவிற்கு காசு கொடுப்பதும் நாமே. நாம் பதினஞ்சு ரூவாவுக்கு வாங்கும் சோப்பில் இருந்து ஒன்றரை லட்சம் கோடி ரூவாய்க்கு வாங்கும் ஆயுதம் வரை - அமெரிக்க முதலையின் வாயிக்கு செல்கிறது.

இலங்கை - ஈழ பிரச்சனை ஆனாலும் சரி, இந்திய பாகிஸ்தான் பிரச்சனை ஆனாலும் சரி, பாலஸ்தீன பிரச்சனை ஆனாலும் சரி எல்லாவற்றிலும் பயனடைவது அமெரிக்க (மற்றும் அதன் கூட்டாளிகளின்) ராணுவ தொழிற்சாலை வளாகமே. எனவே அவர்களுக்கு உலகமெங்கும் போர் தேவை. அதன் மூலம் ஆயுதம் விற்ப்பனை தேவை.ஏதேனும் காரணத்தால் எந்த பிரச்சனையாவது முடிவுக்கு வந்து விட்டால் - இப்பொழுதும் லாபமே. அவர்களின் கோக், பெப்சி விற்ப்பதற்கு நல்ல சந்தை கிடைத்து விட்டது. முன்னதை போல பின்னதில் வருமானம் அந்த அளவிற்கு இல்லை என்ற வருத்தத்துடன், அதையும் வரவேற்கும்.

இவை ஒரு புறம் இருக்க, இனி அமெரிக்க கூட்டாளிகளின் சொந்த இனப் பிரச்சானைகளை பார்ப்போம். அமெரிக்காவின் தோழன் - அமெரிக்காவின் 51 ஆம் மாநிலம் என்று சொன்னால் தப்பாகத கூட்டாளி - பிரிட்டன். இதன் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து ( ச்காடிஸ் மொழி பேசுபவர்கள் மற்றும் பேசியவர்கள் ) குறிப்பிட்ட வரைமுரைக்குட்பட்ட சுய ஆட்சி கொண்டது. எனினும் பிரிடிஷ் நாடாளுமன்றமே வரி விதிப்பு, பாதுகாப்பு, வெளி உறவு கொள்கைகள் மாற்று பல அதிகாரங்களை வைத்துள்ளது. ச்காட்டிஸ் தேசிய கட்சி முழு அதிகரங்களுடன் தனி நாடு கோரிக்கையை முன் வைத்து போராடிக்கொண்டு இருக்கிறது.

மற்றொரு கூட்டாளியான ஸ்பேயின் பல தன்னாட்சி மண்டலங்களையும், இரு தன்னாட்சி நகரங்களையும் கொண்டது. இருந்தாலும் அனைத்தும் ஒரே நாட்டின் கீழ் வருகிறது. கேடலன் பேசும் மக்கள் வசிக்கும் கேடலோனியா - ஸ்பேயின் னிலிருந்து முற்றிலுமாக தன்னாட்சி பெற பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது. காட்டலோநியாவில் ஸ்பானிஷ் கட்டாயம். காடலன் துணை அலுவலக மொழி மட்டுமே. ஒவ்வொரு காடலன் மனிதரும் கட்டாயமாக ஸ்பானிஷ் கற்றே ஆகா வேண்டும். காடலோநியவின் உற்பத்தி திறனோ மாற்ற மாகாணங்களை விட அதிகம். ஆனால் அதற்கு கிடைக்கும் பலன்களோ மிகவும் குறைவு; ஏனெனில் மற்ற மாகாணங்களின் உற்பத்தி திறன் குறைவு. (இதே காரணம் நமக்கும் உள்ளது - ஆனால் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டில் இதை பற்றி பேசுவது குற்றம். )
இதேபோல் ஸ்பெயினின் மற்றொரு மகானமான பாஸக் மொழி மேசும் பாஸக். அவர்கள் இன்னும் ஒரு படி மேலே பொய் ETA என்னும் ஆயுதம் தாங்கிய போராட்ட குழுவாகவும் செயல்படுகிறார்கள்.

அமெரிக்காவின் பக்கத்து நாடான கனடாவிலும் அதே தான். குபெக் என்னும் மாகாணத்தில் தொண்ணூறு சதவிதிதற்கு மேல் பிரஞ்ச் பேசும் மக்கள். குபெக் கிட்ட தட்ட தனி ஆளுமை கொண்டதாக இருந்தாலும் அங்கும் கனடிய கான்ச்டிடுசன் தான். அவர்கள் நீண்ட நாளாக - தனி நாடு கேட்டு போரடுதிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு கனடிய பார்லிமென்ட் ஒரு தீர்மானம் போட்டது - கியபுக் என்பது கனடவுக்குள் இருக்கும் ஒரு தனி நாடு என்று. அதாவது - உங்களை நாங்கள் விடமாட்டோம். ஆனா நீங்க தனி நாடுன்னு சொன்னா சொல்லிக்கங்க. இன்னும் குழப்பம் தீர்ந்ததாக இல்லை. இதே போன்றதொரு நிலை தான் அமெரிக்காவின் போர்டோ ரிகோ விற்கும்.

இப்படி வல்லரசுகள் அனைத்தும் இன பிரச்சனை களை நரசிம்ம ராவ் பாணியில் சமாளிக்கும் பொழுது, அவர்களே அவர்களின் நட்டு நலனிர்க்காக உழைக்கும் மக்களுக்கு முழு விடுதலை அளிகக மனம் வராத பொழுது, நம்மை பற்றியா சிந்திக்க போகிறார்கள்.
எந்த ஒரு நாடும் - தனது அதிகார எல்லையை சுருக்கி கொள்ள சம்மதிக்காது - ஏனெனில் அதிகாரம் என்பது மகிழ்ச்சி - அல்லது போதை.

குறிப்பு:
இந்த நாடுகள் அனைத்தும் எந்த ஒரு இன விடுதலையையும் கண்மூடி ஆதரிக்கும், வரவேற்கும் - அந்த இனம் கமியுநிச ஆட்சியில் இருக்கும் போது மட்டும்!

ராசிபலன் - ஜோதிடர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகளும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.

 

சின்ன வயசுல 'எப்ப பார்த்தாலும் விளையாடதடா' னு அம்மா வெரட்டி வெரட்டி அடிச்சு படிடானு சொன்ன கொஞ்சமும் கேட்க்க மாட்டான்;
கை எழுத்து மோசமா இருந்தா தலை எழுத்து மோச மா போயிடும்னு வாத்தியார் சொன்னா மதிக்க மாட்டான்;
வெட்டி பசாங்களோட சேராதடானு அப்பா சொன்னா 'பெரிசு பேச்ச பாரு' னு  கண்டுக்க மாட்டான்;
'டேய் இந்த பொண்ணு வேணாம்டா. அவுங்க அப்பன் அருவள எடுப்பாண்டா' னு நண்பன் சொன்னா கேக்காம போயி லெட்டர் கொடுத்து  அடி வாங்கி வந்து நிர்ப்பான்;
'இந்த கேள்வி கேட்க படாத வருசமே இல்ல. மறக்காம மார்க் பண்ணிக்கங்க'னு லேச்சரர்  சொன்னத கூட கேக்க மாட்டான்;


இப்படி எப்பவுமே யாரு பேச்சையும் கேக்காதவன் - திடீர்னு ஒரு நாள் கல்யாணம் பண்ணுற வயசுல  - கன்ன மூடிகிட்டு ஒருத்தன் பேச்ச கேப்பான் !! யாரு பேச்சனு கேக்குறீங்களா ?? அவரு தானுங்க f=ma, cos,sin,tan, இண்டகிரேசன், டிபாரன்சியேசன் எதுவுமே இல்லாம - சூரியனுக்கும், நிலவுக்கும், புதனுக்கும் உள்ள தூரத்தையும் அது உங்க மேல செய்ற ஆதிக்கத்த ஒன்பது கட்டத்துல விளையாடி கட்டும் நம்ம ஜோஸ்யகாரு.

கணக்கு வாத்தியாரு போடும் மேட்ரிக்ஸ் கூட்டல் கணக்குக்கே (அதுவும் 2X2 மேட்ரிக்ஸ்) பத்து தடவ சந்தேகம் கேக்குரவனுங்க, நம்ம ஜோச்யகாரு சொல்லும் 'மூணாம் இடத்தில் இருக்கும் சந்திரன் ' னு சொல்லுறதா ஆடாம அசயமா கேட்டுகிட்டே இருக்குரானுங்க. 

எல்லாரும் ஜாவா படிச்சுட்டு அஞ்சு டிஜிட்-ல சம்பளம் வாங்குரப்ப - நீ ஹர்ட் வேர் சாப்புனு சொல்லி டைல்ஸ் வித்து கிட்டு இருக்குற  . 'டேய் உனக்கு எல்லாம் பொண்ணு கிடைக்குறதே ரெம்ப கடினம்டா. அதுல எல்லாம் புடிச்சிருந்தும் ஜாதகம் ஒத்து வரலைனு சொல்லுறது எல்லாம் ரெம்ப திமிரு' சொன்னா கேக்க மாட்டேங்க்ரானுங்க. "சும்மா இருடா..ஜாதகம் பாக்குறதுல தான் இம்புட்டு கல்யாணம் சக்சசா இருக்குன்னு" பதில் வேற. என்னத்த சக்சஸ் ?

ஏன்டா பெரந்ததுல இருந்து "கட்டிகுடுக்க போறவ ', 'பொண்ணு ' வேற வெட்டுக்கு என்னிக்காவது போறவா, கட்டிக்க போறவன் எப்படி வச்சிக்க போரானோனு'  நாள் தோறும் ஒப்பாரி வச்சு பாட்டு படி பொண்ண வளர்க்குறீங்க'. 'அங்க போகாத, இங்க போகாத , அண்ணன் கடைக்கு போவான், அப்பா ட்ரச்ஸ் வாங்கி வருவாருன்னு -பொண்ண எங்கயும் போக விடமா - யாரிட்டையும் பேசவிடாம அடக்கி வச்சிருறீங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே 'அடக்கம் ஒடுக்கம் ' னு ஒரு வாய்ப்பாடு கொடுதிருரீங்க. விவாகரத்து, மறு திருமணம் எல்லாத்தையும் சமுதாய இழிவா படம் போட்டுறீங்க. தனக்கு புடிச்ச பய்யனோட பொண்ணு வாழ ஆசைபட்டா அதுக்கு பேரு "காதலனுடன் ஓட்டமாம்', கல்யாணத்துக்கு அப்புறமா காதல் வந்தா அதுக்கு பேரு 'கள்ள காதலாம்' . நீங்களா ரெண்டு பேரை சேர்த்து வச்சா அதுக்கு பேரு திருமணம். அவுங்களா முடிவெடுத்து செஞ்சா கள்ள காதல் .  பாதிக்கு மேற்பட்ட பொண்ணுங்களுக்கு பினான்சியல் சுதந்திரமும் கிடையாது . வேல பார்த்தலும் கல்யாணம் பண்ணுறதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே   ரிசைன்  பண்ணிடுராளுக - அல்லது பண்ண வச்சிருறீங்க. 280 நாளுல குழந்தை வேற பிறந்திடும்    ... இப்படி எல்லாம் 'கலாச்சாரம்' னு போர்ட் போட்டு  செட் போட்டு வச்சிட்டு கல்யாணம் பண்ணினா - சுத்தமா புடிக்காட்டி கூட குடி இருந்து தான் ஆவா...  ??

அதெல்லாம் உனக்கு தெரியாது .... astrology ன்றது சயின்ஸ் ..நீ விதண்டாவாதம் பேசுற !!

யாரு நானா.. டேய் இயற்பியலும் அறிவியல், வேதியலும் அறவியல். பூமிய விட்டு வெளியே ராக்கட் போகனும்னா நொடிக்கு சுமார் 12 கிலோமீட்டர் வேக  முடுக்கதுல போகணும்னு ஒருத்தன் கண்டுபுச்சு சொல்லுறான் .. அதே மாதிரி இந்தியா காரன் ராக்கட் விட்டாலும் போகும், அமெரிக்கா காரன் விட்டாலும் போகும், ரசியா காரன் விட்டாலும் போகும்...  நீ  என்னன்னா  'ஒருத்தன் அம்மாவே  மீண்டும் ஆட்சிக்கு வருவாங்கன்னு சொல்லுறதையும்  இன்னொருத்தன் இல்ல கலைஞர் தான் வருவார்னு சொல்லுறதையும் ' அறிவியல் முலாம் பூசுர!  . ஆனா ஒன்னு நீங்க எல்லாபேருமே ஒரு விஷயத்துல தெளிவா  இருந்தீங்க . காங்கிரசோ, பா மா கா வோ, பா ஜா கா வோ வராதுன்றதுல   . பாவம்  அவனுங்க யாருக்குமே நல்ல ஜாதகம் இல்ல . என்ன பண்ணுறது !!!

சூரியன், நிலா எல்லாம் பூமி, சுக்கிரன், வெள்ளி மாதிரி கோள் கிடையாது. எல்லா கோளும் சூரியன மய்யமா வச்சு சுத்துது, அப்புறம் கோடானு கோடி நட்சத்ரம் இருக்கு - அது 27 அல்லது 27 வகையோ கிடையாது.. முந்தா நேத்து மியன்மார்ல லட்சம் பேரு செத்து போய்ட்டான், நேத்து சீனால ... அப்படியுமாட இந்த கருமத்த நம்புற ???

'உனக்கு வேற வேலையே இல்ல. நான் கிளம்புறேன் '

ஆமாம்  எனக்கு தான் வேற வேலை இல்லையே. அதனால் சுவராச்யமா இதுல எதாவது இருக்கா என்று தெரிய ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தேன். எனக்கு தெரிந்த  எல்லா வலைத்தளங்களிலும்  12 - மே - 2008, திங்கள் கிழமைக்கு அல்லது அந்த வாரத்திற்கு ( இந்த பதிவோட முதல் பிரதி நாள் ) மேஷ ராசிக்கு என்னனு போட்டிருக்கங்கனு பார்ப்போம்.

தினமணி என்ன சொல்லுதுனா:
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சில சிக்கல்களைச் சந்திப்பார்கள். எனவே கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்காதீர்கள்.

வேப்டுனியா என்ன சொல்லுதுனா:
கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்

ஆக இனி வியாபாரிகள் ராசி பலன் பார்க்க வேண்டுமானால், முதலில் எந்த ராசிபலன் நல்ல பலனை சொல்லும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு அதை மட்டும் படிக்க வேண்டும்.

ராசி பலன் பக்கங்கள் எல்லாம்  நடக்கலாம், ஏற்ப்படலாம் போன்ற பம்மாத்து வார்த்தைகளாக இறைந்து கிடக்கிறது.
இருந்தாலும் மீண்டும்  படிக்கலானேன்.

தினமணி :
விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இரு மடங்கு லாபம் கிட்டும். உங்களின் பழைய கடன்கள் வசூலாகும். உங்களின் பொருளாதார நிலைமை சீரடையும்.

குமுதம் ஜோதிடம்:
விவசாயத்துறையினர் : செவ்வாய் அர்த்தாஷ்டமத்தில் கேதுவுடன் சஞ்சரிக்கிறார். எனவே பூமி, நிலம், வீடு இவற்றால் ஆதாயங்களை எதிர்பார்க்க முடியாது. தொழிலிலும் சற்று பின்னடைவு காணப்படும். வருமானம் சிறிது குறையக்கூடும்.

டினபூமியில் ஐயோ நான் மேஷ ராசி இல்லாமல் போய்ட்டேனே என எல்லோரையும் ஏங்க  வைக்கும் விதமாக  "தேவைப்படும் பொழுது எல்லாம் இந்த வாரம் பணம் கிடைக்கும்."  என உள்ளது.

படிச்ச நாலு வலிலேயே இம்புட்டு காமெடி யா ??

மொத்தம் நீங்கள் செய்ய வேண்டிய ( செய்திருக்க வேண்டிய ) பரிகாரங்கள்:
புதனன்று பெருமாளை தரிசிக்கவும். நவக்கிரகப் பிரதட்சிணம் செய்யவும்.

கீழ்க்கண்ட பாடலைத் தினமும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்ராதித்ய விமர்தனம்
சிம்ஹிகா கர்ப்ப சம்பூதம்
தம்ராஹ§ம் பரணமாம்யஹம்.

முருகர் வழிபாடு சனிப்ரீதி.
விநாயகருக்குஅருகம் புல் மாலை சாற்றி வழிபடவும்.
செவ்வாய் பலம் இழக்கும் இந்த மாதத்தில் தேக நிலை சீராகவும், செல்வ நிலை பெருகவும் அங்காரகனை வழிபட்டு வருவது நல்லது.

வாரத்துக்கு எழு நாட்கள் தான் மறந்து விடாதீர்கள்.

மிச்ச தகவல்களை வைத்து  நம்மளும் கொஞ்சம் கட்டம் போட்டு பாப்போம் என்று பார்த்தேன்.   நல்ல நாள் கணித்த மூண்டு ஜோதிடர்கலுமே தாங்கள் சொன்னது தான் நல்ல நாள் என்று அடம் பிடிக்கிறார்கள். யாரும் மற்றவர் கணித்ததை ஒத்துக்கொள்ள மறுக்கிராகள்.  மேஷ ராசிகரகளின் அதிர்ஷ்ட வண்ணத்தை பார்த்தல் சிரிப்பு வரவில்லை ?? எல்லோரும் ராமராஜன் கலரில் தான் சட்டை போடணும் ...

அதிர்ஷ்ட

தினமணி

வெப்துனியா       யாஹூ தினபூமி

தந்தி

குமுதம்  

நாள்

10, 13       12 14,15,17  

எண்

  8   1,9 1,5 3,5  

வண்ணம்

  வைலெட்,ஊதா

சிவப்பு,வெள்ளை

  ரோஸ்,பச்சை    
               

 

கடைசியாக, தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழக அரசு எங்கள் வரிப்பணத்தில் 'ஜோதிட வாரியம்' ஒன்று அமைக்க வேண்டும். அதில் எல்லா ஜோதிடர்களையும் உறுப்பினராக்க வேண்டும். எல்லா ஜோதிடர்களையும் எங்கள் நலனிர்க்காக கூடி ஒருமித்த கருத்தில் ஜோதிடம் - ராசி பலன் எழுத சட்டம் போட வேண்டும்.

குறிப்பு:
குமுதம் ஜோதிடம் :
கலைத்துறையினர் : நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். வசதிகளும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும்.

ஜோதிடமும் கலை என்பதால், அதுவே இந்த பதிவின் தலைப்பும்

Monday, May 19, 2008

யானைக்கும் அடி சறுக்கும் ????



சமீபத்தில் இஸ்ரோ பத்து செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. மகிழ்ச்சியான விசயமே. அதற்கு எவ்வளவு செலவாகி இருக்கலாம் என்பதும், இதை 'sea launch' போன்றவர்களிடம் கொடுத்திருந்தால் எவ்வளவு செலவாகி இருக்கும் என்பதும் சரிவர ஊகிக்க இயலவில்லை ( சரி சரி... விக்கி பீடியா எனக்கு சரியா சொல்லல !). இந்த பதிவு அதைப்பற்றி இல்லை.

இந்த பதிவு நம்ம இஸ்ரோ சேர்மன் பத்திரிக்கை யாளர்களிடம் சொன்னவற்றைப் பற்றி. அவர் சொன்னது (அல்லது சொன்னதாக நான் படித்தது !!): " ஒரே ஏவலில் நாம் பத்து செயற்கை கோள்களை ஏவி சாதனை படைத்துவிட்டோம். இதற்க்கு முன்னால் ரஷ்யா மட்டுமே பதின்மூன்று செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவ முயற்ச்சி செய்தது. அது வெற்றி கரமாக ஏவபட்டதா இல்லையா என்பதி பற்றி எனக்கு உறுதியாக தெரியாது."

நான் படித்த செய்தியே ' இதற்க்கு முன்னால் ரஸ்யா பதினாறு செயற்கை கோள்களை வெற்றிகரமாக ஏவி உள்ளது' என அடுத்த வரியிலேயே கூறிவிட்டது.


அதனால் கூகிள் மற்றும் விகி பீடியா வை திறந்து பார்த்ததில் 'ரசியாவின் Dnepr என்னும் ராக்கட் 2006 ம் ஆண்டு ஏவலில் தோல்வி அடைந்த பின், 2007 ல் மீண்டும் ஏவப்பட்ட பொழுது அது வெற்றிகரமாக 16 செயற்கை கோள்களை ஏவியதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் அந்த ராக்கட் 10 முறை ஏவ பட்டு ஒரே ஒரு முறை மட்டுமே தோல்வியில் முடிந்துள்ளது.அந்த ராக்கட் செயற்கை கோள் ஏவும் பணிக்கு முன்னர் 160 முறை ஏவுகணை ராக்கட் ஆகா வேறு பயன்பட்டு உள்ளது.  

இதை படித்ததில் மிகவும் ஆச்சர்யம். தனது துறை சார்ந்த செய்திகளை - அதுவும் சொற்ப நாடுகளே செய்திகளை ஏற்ப்படுத்தும் துறையில் - முழுவதும் அறிந்து கொள்ள இஸ்ரோ சேர்மன் முயற்சிக்க வில்லையா ? பத்திரிக்கை யாளர் சந்திப்பில் - அதுவும் ஒரு வெற்றிகரமான செய்திக்கு பின் சந்திக்கும் போது - இப்படி பட்ட செய்திகளை மேற்கோள் கட்டமலே இருந்திருக்கலாம் அல்லவா ? இல்லை நாம் செய்யும் சாதனைகள் மிக பெரியவை என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்த இவ்வாறு சொல்ல பட்டதா.?

குறிப்பு : யானைக்கும் அடி சறுக்கும் என்று கூறியது 'Dnepr' ரை முன் வைத்து

Saturday, May 17, 2008

இந்தியன் என்பதில் பெருமைப்படு ??

இந்தியன் என்பதில் பெருமை பட சொல்லி எத்தனை எத்தனை  மின் அஞ்சல்கள்... மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன.  ஒரு நாள் விட மாட்டேன்றானுங்க ....  சுதந்தர தினமாம், குடியரசு தினமாம்... இந்த நாட்ல 'குடி அரசு' க்கு அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்??

சபீர் பாட்டியா , வினோத் கோஸ்லா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சாதனைகளை தேசத்தின் சாதனைகளாக மாற்றி நமது அறிவை கேலி செய்யும் கேள்வி பதில்கள்;
செயற்கை கோள்களை சுமந்து செல்லும் ராகெட் படங்களுடன் செய்தி;
'தாய் மண்ணை போல் ஒரு ஜீவன் இல்லை ...வந்தே மாதிரம்' என்று முழங்கும் லண்டனில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்க ஐரோப்பிய பங்குதார்களுக்கு லாபம் ஈட்ட சோனி யால் வெளிஇடப்பட்ட பாடல்கள்;
மைக்ரோ சாப்ட்டில் பில் கேட்சை தவிர, நாசாவில் கேன்டீன் செப்ப் தவிர அனைவரும் இந்தியர் என்று புளுகும் மினஞ்சல்கள் - இப்படி நாளொரு வண்ணமும் தேசபக்தி கெஞ்சல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இப்ப புதிதாக ( குறைந்தது எனக்கு மட்டுமாவது புதிதாக) ஒரு விடீயோ எனக்கு வந்தது. சாய்ந்து விழுந்து சாலையை மறைத்து கொண்டிருக்கும் மரத்தை, மழையில் நகர்த்த முயலும் சிறுவன்;

இதுமாதிரி 'மயக்க பிஸ்கட்' மினஞ்சல்களை பிறருக்கு அனுப்பி தேச பக்தியை கோலோச்சும்  நண்பர்களுக்கான ஒரு நினைவூட்டல் ...

முப்பது கோடி மக்கள் தினமும் ஒரு அமெரிக்க டாலர் க்கு (வறுமை கோடுங்க) குறைவான தொகையில் வாழ்ந்து சாவதும், ஒரு மனிதர் உலகின் முதல் பில்லியன் டாலர் வீட்டை கட்டுவதும், வருடம் தோறும் போதிய ஊட்டச்சத்தான உணவு இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகமாக இருப்பதும், உலகிலேயே அதிக குழந்தைகள் இறப்பு , உலகிலேயே அதிக HIV யால் பதிக்க பட்டோர் ( இருபத்தி ஐந்து லட்சம்) இருப்பதும், இரண்டரை கோடி குழந்தை தொழிலார்கள் இருப்பதும், ஏழரை கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதும், இன்னும் பல கோடி குழந்தைகள் மதிய உணவிற்காக பள்ளிக்கு வருவதும் இந்த நாட்டில் தான்.

முதல் உலக போரிலும், இரண்டாம் உலகபோரிலும் எதிரிகளாய்  இருந்த அத்தனை தேசங்களும் இன்று ஒற்றுமை யாய் இருக்கின்றன. அவைகள் வீட்டில் வளர்க்கப்படும் மீன்-க்கு தொட்டி குறைந்தது  என்ன அளவில் இருக்க  வேண்டும், வாரத்திற்கு குறைந்தது நாயை எத்தனை முறை  வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டு கொண்டு  இருக்கின்றன. ஆனால் பாலாய் போன இந்தியர்களின் தேச பக்தி இந்த வருடம் மட்டும் ராணுவத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை ஒரு லட்சத்து ஐந்து ஆய்ரம் கோடி. வருடா வருடமும் இதே மாதிரி தான். இந்த அரசு மக்களுக்கு - மக்களின் நலனிற்கு செலவிடும் தொகையோ இதில் சொற்ப பங்கு.  பட்டினியால் கடனால் உலகமயமாக்கலால் சாகும் விவசாயி களின் கடன் ரத்தை பாண்ட் சைஸ் எண்பத்தி ஆறில் வெளியிடும் எல்லா பத்திரிக்கையும் இதை  வானிலை அறிவிப்பு அளவிற்கு கூட கண்டு கொள்வது இல்லை.  இப்படி டன் கணக்கில் தேசபக்தியால் நாட்டு  மக்களுக்கு அநீதி இளைக்கப்படுவதும் இந்த நாட்டில் தான்.


Patriotism is the last refuge of the scoundrel.”  அப்படின்னு சாமுவேல் ஜான்சன் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.

Tuesday, April 22, 2008

டோண்டூ கேள்வி பதில்கள் - எனது வடிவில்...

தாங்காதுடா சாமி... எங்க பார்த்தாலும் கேள்வி பதில்... அப்ப நம்ம ??

எல்லாரும் கேள்வி பதில் எழுதுறாங்க.. அவுங்க அவுங்க படிச்ச விக்கி பீடியா பக்கங்களை உபயோகிக்க ஒரு சந்தர்ப்பமாவோ, நல்ல பய்யனாவோ சமர்த்தாவோ காம்பிக்கிறாங்க... சரி அதே மாதிரி நாமளும் பண்ணுவோம்...

1) அம்பேத்கர் இயற்றிய சட்டம் தற்காலத்திற்கு சரியாக உள்ளது என நினைக்கிறிர்களா?

 
ஏன்டா  அம்பி மனு வோட சட்டம் பத்தாதா, அதுல இல்லாத ஒன்னு ரெண்டு ஐட்டமா உங்களுக்காக நாங்க சேத்து தன்தூம்ல... நீங்க பாட்டுக்க கிச்மஸ் கேக் தர்ரன்ட்டு மதம் மாற கூடாதுன்னு சட்டம் போட்டோம்... நீங்க பசில எலிக்கறி நத்தை கறி எல்லாம் சாப்பிடப்ப கூட மாட்டு  கறி பிரியாணி சாப்ட விடாம பாத்துகிறோம்... நீங்க நாகரிகம் இல்லாம  ஆடு கோழி எல்லாம் கோவில்ல வெட்டி திண்டப்ப அத கூட தடா செஞ்சோம்...

2) மோதி பிரதமர் ஆனால் இந்தியாவும் சிங்கப்பூர் போல கட்டுப்பாடான தேசமாக முடியும் என் நினைக்கிறிர்களா?

ஏன்டா அம்பி... காக்கி தவுசரால முடியாதுன்னு எதுவும் இருக்காடா.... போலிஸ ஏவி encounter பண்ணி அத வீர முழக்கமா பேச மாட்டோமா... tehelka வீடியோ  எல்லாம் பிளாக் பண்ணிட்ட அப்புறமா கட்டுபாடா நீங்க குடும்பம், குல விளக்குனு  பார்த்து சந்தோசமா தான இருப்பீங்க... ஆனா அம்பி, எங்க ஆளு மேடைல மைக்குல தான் பெசுவாராக்கும்... அதுவும் கேப்ப்டன் காதே கூசுற அளவுக்கு புள்ளி விவரமா பேசுவாராக்கும்...எங்க தலை பேச்சு எல்லாம் one way-வா தான் இருக்கணும்..... தனியா  studio ல கூப்பிட்டு  வச்சு ஒரே ஒரு கேள்வி கேட்டா  கூட ஒன்னுக்கடிச்சு, ஒன்னுக்கா வரமுடியாத தண்ணிய வியர்வையா  வர வச்சு, dehydration ஏ தண்ணி குடிச்சு சமாளிச்சு வீட்டுக்கு போயடுவாறக்கும் ....

3.வளர்ந்த நாடுகளில் கட்டாய ராணுவ பயிற்சி இருக்கும் பொது நம்நாட்டில் இல்லாதது பற்றி உங்கள் கருத்து?

என்னடா அம்பி... உனக்கு வெவரம் பத்தலைஎடா... அங்க foreign ல எல்லா பேருமே சூத்திர டா... அதனால அவ டவுசர   அவளே அவுப்பா , தொவைப்ப, தேப்பா, கக்கூஸ் கலுவுவா, அதே மாதிரி அவா நட்ட அவளே காத்துக்குவா... எந்த நாட்டயாவது  போயி சூறை ஆடனும்னாலும் அவாளே போயி கொள்ளை அடிப்பா..இதெல்லாம் நமக்கு ஒத்துவருமா சொல்லு நம்ம தான் தனியா சூதிரானு ஒரு குரூப் வசிருக்கொம்ள... அவ பாத்துக்குவா... சத்தமா பேசாதடா - கட்டாயம்னு  வந்துட்டு  - நம்ம ஆத்து பிள்ளை எல்லாம் துப்பைக்கிய தூக்கி ஓட முடியுமாடா....   

4.சாத்தியமில்லாத விசயங்களை சினிமாவில் ஹீரோ செய்யும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

அதெல்லாம் ஜூ ஜூ பி... இல்லாத கடவுள வச்சு நம்ம பன்ன்ற பிசினஸ் முன்னடி எல்லாம் மயிருக்கு சமம்...

5. பிற மொழி படங்கள் அதாவது உங்களுக்கு தெரிந்த மொழி படங்கள் அடிக்கடி பார்ப்பதுண்டா?

பிற மொழி ? அப்பைக்கு அப்ப தான் தமிழ் படம் பாப்பேன்.

6. "திராவிடீயம்" என்ற வெங்காய அல்வாவை வெற்றிகரமாக தமிழகத்தில் விற்ற தாடிக்காரருக்கு,அல்வாவை மற்ற தென் மாநிலங்களில் விற்க முடியாமல் போனதுக்கு,அந்தக் காலத்தில் தமிழன் மட்டும் தான் இளிச்சவாயனாக இருந்தான் என்பது தானே காரணம்?

அம்பி, நம்ம கெட்ட நேரம் தமிழன் மட்டும் கொஞ்சம் சுய மரியாதையை பத்தி - அந்த தாடி காரன் பேச்ச கேட்டு  யோசிச்சான்... இருந்தாலும் நம்மவா இப்ப எல்லாம் media ளையும் இருந்துன்ன்டு அத reclaim பண்ணிட்டு வரா டா ...

7. இந்த வெங்காய மோசடி அல்வாவை இப்போது கூட கூவி கூவி விற்பனை செய்யும் மஞ்ச துண்டு,மானமிகு,ராசேந்திரன்,மீசை வீரபாண்டியன்(ஏன் வலையுலகத்தில் கூட கோவி.மு.க அய்யா,டி பி சி டி0,1,2,மற்றும் ம க இ க காமெடி வில்லன் பேர்வழிகள்)போன்ற அயோக்ய வியாபாரிகளின் வெற்றிக்கு காரணம், தமிழன் அப்போது மட்டுமல்ல இன்னும் கூட இளிச்சவாயனாகத்தான் இருக்கிறான் என்பதைத்தான் காட்டுகிறதா?

டேய் அம்பி... லூசு பஎலே.. தமிழன் தமிழ்னு சொல்லாதடா .. சமயத்துல நமக்கும் அந்த போர்வை தேவைப்படும் ... ஒழுங்க திராவிட பசங்கனே சொல்லு ...

8.சார், நீங்க ஜெர்மன், பிரெஞ்சு மட்டும் தான் மொழிபெயர்ப்பு செய்வீங்களா ? சான்ச்கிரீட் ல பண்ண மட்டேங்களா ?


ஏன்டா அம்பி துட்டு வர லங்குவேஜா தாண்ட படிக்க முடியும்... வேல பக்க முடியும்....  அத படிச்சா கோவில்ல மணி அடிக்க வேண்டியதுதான்... சூத்திரா தட்டுல போடுறதா எடுத்து சாப்டனும்... அந்த கஷ்டத்த நெனச்சு கூட பாக்க  முடியலே.. சுஜாதா சார் இருந்தா அந்த கஷ்டம் எப்படி இருக்கும்னு ஒரு கதை ஆவது எழுத சொல்லலாம்..

9. சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவீர்களா?

அந்த 'பொங்கல' ஒழிச்சு கட்ட தாண்ட நம்மவா மகர சங்க்ராதினு ஒன்னு கொண்டு வந்தா... ஆனா பாரு இந்த திராவிட குஞ்சு இன்னும் நக்மா, கொவ்சல்யா போட்ட படத்த போட்டுக்கிட்டு  பொங்க வாழ்த்துனு அனுபிசிட்டு திரியுதுக...இன்னும் பத்து பாஞ்சு வருசத்துல நம்ம வழிக்கு வந்திருவாங்க... அப்புறம் நமக்கு எல்லா நாளும் புத்தாண்டு தான்...

10. அரசு ஏன் இந்துமதத்துக்கு மட்டும் அறத்துறை வைக்க வேண்டும்?

அது தெரியாதாடா அம்பி... இப்ப இருக்க கோவில் நிலம், சொத்து எல்லாம் நம்மவா விவசாயம் பார்த்து, கருத அறுத்து, நெல்லு வித்து சம்பாரிச்சதுனு நேச்சியாடா ???  அப்பாவியா இருக்காதடா... அதெல்லாம் இந்த நாட்ட ஆண்ட அரசர்கள்  மந்திரத்துக்கு கட்டுப்பட்டு மக்கள்ட்ட இருந்து புடுங்கி நம்மவாட்ட  கொடுத்தது...  நமக்கு தான் உண்டியல் காசு போகும்னு தெரிஞ்சா இவா எல்லாம் செல்லாத நலனாவும் அம்பது காசும்தான் போடுவா... அப்புறம் நம்ம சிள்ளரைக்கே சின்ஜா தான் அடிக்கணும்...    

11. 27% OBC இடஒதுக்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து?

நல்ல வேலை.. அவா, அவா ஜாதில இருக்குற கிரீமி லேயர பத்தி தான் பேசுறா..! நம்மள பத்தி பெசலா. கிரீமி லேயரா - பணக்கரனா இருந்தா - எந்த ஜாதியா இருந்தா என்னா.. அவா அவா அவா ஜாதி ல இருக்க பாவப்பட்ட பசங்களுக்கு விட்டு கொடுக்குறது தான முறை.. எங்க ஆளு தான் IIT, IIM, supreme court னு எங்க பார்த்தாலும் இருக்காளே. மொதல அவல  இதுக்குள்ள கொண்டு வரத்து தான முறை....

12. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றி பெற்றுவிட்டால்?

இந்துத்துவாவுக்கு சங்குதான்.

Saturday, March 08, 2008

சுஜாதா சார் ரசிகர்களுக்கு ஒரு டெம்ப்லேட்...- சுட்ட பதிவு

சுஜாதா அவர்கள் இறந்து பல நாட்கள் ஆன பின்னரும், இன்னும் அவரது மறைவுக்கு வருத்தப்பட்டு வரும் புதிய பதிவுகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும் அதிக பேர் தாமதமாக பின்னூட்டமிடுவதால் மீண்டும் மீண்டு முகப்பில் இந்த பதிவுகளே இடம்பிடிக்கின்றன .

இதை தவிப்பதர்க்க்காக அவரது ரசிகர்களுக்கு இந்த பதிவு. இதில் உள்ள வரிகளை உபயோக படுத்தி விரைவாக பதிவோ அல்லது பின்னூட்டமோ போட்டு விடவும். கோடிட்ட இடங்களை உங்களுக்கு தகுந்தவாறு பூர்த்தி செய்யலாம்.

நண்பர் மன்வேட்டியன் பதிவு இன்னும் தமிழ்மணத்தில் வராததால் பொறுமை இழந்து என்னை ரிலீஸ் பண்ண சொல்லுறார்.
திட்ட போகும், பாராட்ட போகும் எல்லாரும் அவரது பதிவுலே திட்டவும். 18-35 வயசுக்குள் இருக்கும் அழகான பெண்கள் என் பதிவிலேயே திட்டலாம் , பாராட்டலாம்.

http://manvettiyan.blogspot.com/2008/03/blog-post_06.html

___________

யப்பா சாமி.... இந்த கொடுமைக்கு ஒரு அளவே இல்லையாடா சாமி...
சுஜாதா சார் செத்து ரெம்ப நாள் ஆயபோசுடா... ரெண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியே கிட்டக்க வந்துடுச்சு ... இவனுங்க இன்னும் இரங்கல் கூட்டம் நடத்திட்டு இருக்கனுங்க..
ரெம்ப பேரு திருப்பி திருப்பி எழுதுறீங்க... பின்னோட்டம் போடுறீங்க...அதனால இந்த மேட்டர் தான் திருப்பி திருப்பி தமிழ்மணம் காட்டுது ...
உங்களுக்கு ஒரு டெம்ப்ளேட் தரேன்.

1. சுஜாதா சாரை நான் _____________ பார்த்து உரையாடிய போது அவர் எளிமையும் அறிவையும் ஒரு சேர தாங்கி பிடித்திருப்பது தெரிய வந்தது
( ஏரோ பிளனில், வாசிங்க்டன் சாப்பிங் சென்டரில், மெரினா பீச்சில், டாய்லெட் டில்)

2. அவர் தமிழ் எழுத்துலகின் _____________________
( சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், ஜேம்ஸ் ஹர்ட்லே செஸ் , போரிஸ் பேக்கர், மைக் டைசன் ..)

3. அவரது எழுத்துக்களை நான் __________________ முதலே படித்து வருகிறேன்
( எட்டாம் வகுப்பு மூன்றாம் முறையாக படித்த காலத்திலேயே, பல்வாடியில் சேர்ந்த பொழுது, கல் தோன்றி முன் தோன்ற காலத்தே )

4. அவர் ஒரு __________________
(சகல கலா வல்லவன், எழுத்தையும் தாண்டி நின்றவர், எழுத்துக்கு முன்னடி நின்றவர் , டென்னிஸ் விளையாட்டு வீரரும் கூட, )

5. எனக்கு ___________ ஆர்வம் வந்ததற்கு அவரே காரணம்
( கணினி மீது, கல்குலட்டேர் மீது, பக்கத்து வீட்டு ஆண்ட்டி, எதிர் வீட்டு பிரேமா மேல் , யாஹூ சாட்டில் )

6. அவரது எழுத்துகளை எனக்கு மிகவும் பிடித்தது _________________
( கற்க கசடற, என் இனிய சந்திரா, கொச்சை கயிறு, பிரிப்போம் சந்தி சிரிப்போம், க-நாவில் அவர் புள்ளி வைத்து அதை க்க்-கனாவாக மாற்றும் அழகு )

7. கதை எழுதுவதில் மட்டும் அல்ல, அவர் ___________ மிக திறமையானவர்.
( கவிதை எழுதுவதிலும் , கைவித்தையிலும் , நாடகம் எழுதுவதிலும் , நகம் கடிப்பதிலும், தம்பிராஸ் மாநாட்டில் பேருரை ஆற்றுவதிலும் )

8. சுஜாதா அவர்களின் அருமையான படைப்புக்கு தூண்டுதலாகவும் உதவியாகவும் ________________ இருந்தன என்பது குறிப்பிட தக்கது .

( அவரது அலுவலகத்துக்கு கீழ் இருந்த பெரிய ஆங்கில புத்தக கடை, BSNL லோ BEL லோ கொடுத்த OC இன்டர்நெட் கனக்சன், அவருக்கு வாசகர்கள் அனுப்பிய கேள்வி கணைகள் )

9. அவரது கதைகளை வார இதழ்களில் படிக்கும் போது நான் ஒவ்வொரு வாரமும் மிகவும் ஆவலுடன் தேடுவது ___________
(வசந்த் பேசும் வரிகள், அரஸ் அவர்கள் வரைந்த கவர்ச்சி படங்கள், 'முற்றும்'.)

10. அவரது ___________ தமிழகத்திற்கு பெரும் துன்பம்
( இறப்பு, பிறப்பு, சினிமா வசனங்கள்...)

சீக்கிரம் பில் அப் பண்ணி எல்லாரும் இன்னிக்கு நைட்டுக்குல பதிவு போட்டுரங்க.
நாளைல இருந்து நம்ம வழக்கமான மொக்கைக்கு போய்டலாம்..

Friday, March 07, 2008

சுப்புரமனிய சாமி போல் சோ...

ரஜினியோட தன்வரலாறு நூல் வெளியீட்டு விழாவில சோ பேசு னாராம் .. அதுக்கு நம்ம கமெண்ட் இங்க...
(http://satrumun.com/localnews/?p=82)

//‘ஊழலற்ற தலைமைக்கு ரஜினிகாந்த் & நரேந்திர மோடி போல் ரஜினி’: சோ//

நகைச்சுவையான அரசியல் பேச்சுக்கு சோ & சுப்புரமனிய சாமி போல் சோ

//டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய நடிகர் ரஜினிகாந்தின் ஆங்கில சுயசரிதை ‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.//

நன்றி. நன்றி. மிக்க நன்றி. நம்ம விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு தமிழே தக்கு முக்கு. இதில இனி இங்கிலீஸ் புக்... அவுங்க இத படிக்காம இருக்குறது தான் அவனுங்களுக்கு நல்லது 'நறுக்குன்னு' புரிய வச்சதுக்கு நன்றி .

// பத்திரிகையாளர் சோ புத்தகத்தை வெளியிட ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா பெற்றுக்கொண்டார். //

அப்பாடா .. நான் கூட அம்மா அஞ்சற பெட்டில ஒழிச்சு வச்சிருக்க காசு, பாட்டி வெத்தல பாக்கு போட வச்சிருந்த காசு... சாரி சாரி .... இப்ப அதெல்லாம் உங்க படம் ஓடுற தேட்டர்ல போண்டா வாங்க கூட பத்தாது.... இஞ்சினீரிங் கல்லேசு பீஸ் கட்ட வச்சிருந்த காச ஆட்டைய போட்டு படம் பார்த்து உங்கள கோடிச்வரனக்கிய ரசிக பெருமக்களுக்கு ஏதோ மரியாத செஞ்சுட்டீங்கலோனு பயந்து போயிட்டேன் ...

// ரஜினியைப் பற்றி பல விஷயங்கள் சொல்லலாம். என்னைப் பொருத்தவரை ரஜினியின் நண்பர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவருடன் பல ஆண்டுகள் பழகியிருந்தாலும் அவரை கணிப்பது மிகவும் சிரமமான விஷயம். //

ஜினி முதலமைச்சரா இருக்குற அரசபைல நீங்க சபா நாயகர் ஆகனும்னா இது மாதிரி எல்லாம் சொல்லி தான் ஆகணும்.


// அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் வாழ்க்கையில் நடிகர் இல்லை. அவர் அரசியல் பேசுவார்; ஆனால் அவர் அரசியல்வாதி இல்லை. ஆன்மிகத்தைப் பற்றி மிக ஆழமாகப் பேசுவார். ஆனால் அவர் சாமியாரோ, குருவோ அல்ல.//

.. உங்க மாதிரி தானா

// அவர் மனதுக்கு ஒரு விஷயம் சரி என்று பட்டால் அதைத் தைரியமாகச் செய்வார்.
ஏதோ என்னுடைய அறிவுரையைக் கேட்டுத்தான் ரஜினி நடக்கிறார் என்று பத்திரிகைகளில்தான் செய்தி வருகிறது. ஆனால் நான் கூறிய எதையும் ரஜினி கேட்டதேயில்லை. //

அந்த மாதிரி செய்தி உங்க பத்திரிகைல தான்னு அவருக்கு தெரியுமா??

//ரஜினிகாந்த் ஒரு படத்தைத் தொடங்கும்போது கதை, திரைக்கதை, உடன் நடிப்பவர்கள் என பல விஷயங்களைப் பல கோணங்களில் யோசிப்பார். பலர் சொல்லும் கருத்துகளைக் கேட்டுக்கொள்வார். ஆனால் இறுதி முடிவு அவருடையதாகத்தான் இருக்கும். //

ஏன்னா இப்ப எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவருதான தயாரிப்பாளர் ... அவரு சேவிங் பண்ணுற காட்சிய மூணு மணி நேர படமா போட்டாலே, போட்ட காசு ஆயிரம் மடங்கா வருதுனா, மத்தவன் பேச்செல்லாம் மதிப்போமா..


//ரஜினியை போல்தான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும். பலருடைய கருத்துகளைக் கேட்டாலும் இறுதியாக முடிவெடுப்பவர் அவர்தான். ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தை குஜராத்தை விட ஒரு படி மேலாகக் கொண்டு சென்றுவிடுவார். அந்த அளவுக்குச் சிறந்த நிர்வாகி. //

பத்தாயிரம் பேரு வேலைபக்குற கம்பென்னிய வருசா வருஷம் ஐந்நூறு சதவீதம் லாபம் வர மாதிரி நிர்வாகிக்கிராரா... இல்ல சூறை விடுறதுக்கு கலர் பேப்பர் கட் பண்ணி தாரா ??

//அதோடு அவருக்கு மக்களின் மீது இருக்கும் அக்கறையும் ஒரு காரணம்.//

இதுக்கு நான் எதுவுமே சொல்ல முடியாதுங்க. எல்லாம் கேள்விபட்டேன்... அவர் ஏரியா மக்கள் தண்ணிக்கு ரெம்ப கச்டபடுறாங்க - நாலு மணி நேரம் வெயில நின்னு குழாய்ல தண்ணி பிடிக்கிராங்கனு கலைக்டேர் ட்ட மனு கொடுக்க போனாருன்னு ... மொத வேலையா அவர வரிசைல நின்னு ஒட்டு போட கத்துக்க சொல்லுங்க...

//அதற்காக ரஜினி அரசியலுக்கு வருவார் என என்னால் உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் காயத்ரி அதில் உறுதியாக இருக்கிறார். இந்தப் புத்தகத்தைப் பற்றி கூறுகையில்… ‘ரஜினி உறுதியாக அரசியலுக்கு வருவார்’ என்று அவர் கூறியதாக பத்திரிகை செய்திகள் வாயிலாக அறிந்தேன்.
இன்னொரு விஷயம்… இதை வேறு எங்கும் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. சிலர் அரசியலுக்கு வந்த பிறகு அவர்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். ஆனால் ஒரு மனிதரை அரசியலுக்கு வாருங்கள் என்று மக்கள் தாங்களாகவே அழைப்பதை இங்குதான் காண முடியும். //

நான் அப்பவே சொன்னேன், அவரு மாட்டாருடா... அவரோட கல்யாண மஹால் அரசாங்கம் போடுற ரோட்டுக்கு இடைஞ்சலா இல்லடா... தலைவர் தெளிவானவரு... எல்லாரும் எஞ்சிநீரிங் காலேஜ் கட்டி கோடி கோடியா சம்பாரிக்கிரப்ப, அத தலைவரு நர்சரி ஸ்கூல் கட்டியே சம்பரிக்கிரவரு ...அத கேக்காம இந்த பன்னாடைங்க இன்னும் போஸ்டர் ஒட்டுரனுங்க...டேய் சீக்கிரம் நிப்பாட்டுங்கட... இல்ல தெலுங்கு மலையாளத்துல எல்லாம் இந்த மாதிரி புக்கு ரிலீசாகும் ...

// ஆரம்பத்தில் அவருடைய ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்துக்கொண்டிருந்தார்கள்; பிறகு அடித்தள, நடுத்தர வர்க்கத்தினரும் அழைத்தார்கள். //

யோவ்.. நல்ல பாருயா.. எல்லாம் அதே பசங்க தான்யா... அவுங்க எல்லாம் மேல் தட்டுல இருந்து - உங்க சிவாஜி படம் டிக்கட் வாங்கின பின்னாடி அடித்தள நடுத்தெரு வர்க்கமா மாறுனவுங்க ..

//ரஜினியிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை; //

நல்ல விஷயம் தான்.. ஆனா அவரது ரசிகர்களுக்கு தான் அவுங்க வீட்டு பசங்கள நீங்களோ இல்ல உங்க மனைவியோ நடத்துற பள்ளி கூடத்துல சேர்த்து படிக்க வைக்கணும்னு எதிர்பர்ர்ப்பு இருக்கு.

// எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் என்ற எண்ணமும் இருந்ததில்லை. ‘சிவாஜி’ படத்தின் வெற்றிக்குக் கூட ஷங்கர், ஏவிஎம் சரவணன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள்தான் காரணம் என அவர்களைத்தான் புகழ்ந்தார். //

நான் கூட கலைஞரோட காரண கரிசனமும், நீங்க ஆணை இட்டால் கங்கையையும் காவிரியையும் இணைக்க துடிக்கும் உங்க ரசிக பட்டாளம்னு நெனச்சேன்.

// சிறிய அளவு பணம், புகழ் சேர்ந்தாலே ஒருவரைப் பிடிக்க முடியாது. தலைக்கணம் ஏறிவிடும். ஆனால் ரஜினிக்கு பெரும் புகழ், பணம் இருந்தும் இன்னும் தலைக்கணம் வராமல் இருப்பதற்குக் காரணம் அவருக்குள் இருக்கும் ஆன்மிகத் தன்மையே. //

ஆமா அவரு வருசா வருஷம் பிறந்த நாளைக்கு ரசிகர்ல பார்த்து கொஞ்சி குலவுரறு..

//அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஊழலற்ற தலைமை உறுதியாக அமையும். //

அப்படியே வறுமை, வேலை இல்ல திண்டாட்டம் எல்லாம் ஒழியனும்னா சிம்ரனையும் ஜோதிகாவையும் முதலமைச்சர் ஆக்கனும்னு UN, உலக வங்கி கொடுத்திருக்கிற report-அயும் வாசிசுடுங்க ..

//மற்றபடி இந்தப் புத்தகத்துக்கு என்னிடம் இருந்து சான்றிதழ் பெறத் தேவையில்லை. அதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் உரிய மரியாதை செய்துவிட்டார்கள் என்றார் சோ.
விழாவில் சி.பி.. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன, தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோர் //

அவரோட வீட்டுக்கு சி பி வருமான வரி சோதனைக்கு - சும்மானாச்சுக்கும் - போயிருந்தா கூட எம்புட்டு நேர்மைய நடந்திருக்கும்னு இப்ப தெரியுது..

//‘த நேம் இஸ் ரஜினிகாந்த்’ புத்தகத்தில் ரஜினிகாந்த் பற்றிய பல விஷயங்கள் உள்ளது உள்ளபடி எழுதப்பட்டுள்ளன என புகழாரம் சூட்டினர்.////

எங்க அப்பன் குதிருக்குல இல்லைன்னு சொல்லுறேன்... அப்புறம் என்னடா

//இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் விஜயகுமார், ஷோபா சந்திரசேகர், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். //


பின் குறிப்பு: இந்த புத்தகத்தை தெரிந்தோ தெரியாமலோ வாங்கி படித்தோ படிக்கமலோ வைத்திருப்பவர்கள் - முடிந்தால் ஒரு ரெவியு எழுதவும் .

நன்றி : நண்பர் மண்வெட்டியான்
(http://manvettiyan.blogspot.com/ )